(Reading time: 21 - 41 minutes)

நிமிரவேயில்லை..

என்னப்பாரு டா..

தன் மான் விழியை உயர்த்தினாள்..ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டா..இந்த பர்த்டேவ என்னால மறக்கவே முடியாது..சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் எல்லாத்துக்கும் மேல என் குட்டிமா என்னோட என் ரூம்ல இருக்கா..தங்க்ஸ் பார் எவ்ரித்திங் டா,.வெரி வெரி லக்கி டு ஹாவ் யு ..என்னோட பொக்கிஷம்டா நீ..என்றபடி தன்னவளின் முகத்தை கையில் ஏந்திக் கொண்டான்..

ராம் ப்ளீஸ்..விடுங்க அம்மா வந்துட போறாங்க..

வந்தா வரட்டும்..என் பொண்டாட்டி நா பேசிட்டு இருக்கேன் யாரு என்ன சொல்றது..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

ராம்

அவளின் நிலையறிந்தவன் வேண்டுமென்றே அவளை சீண்டிணான்,

முடியவே முடியாது குட்டிமா இன்னைக்கு நீ பண்ண வேலைக்குலா உன்ன சும்மா அனுப்பினா நல்லாவாயிருக்கும் என்று கைகளை தேய்த்தபடி நெருங்கினான்..

மறுபடியும் சுவரில் முட்டி நின்றவள்,தன் கையால் அவன் மார்பை பிடித்து நிறுத்தினாள்..கைகளில் அப்படி ஒரு நடுக்கம்..வேண்டாங்க இதெல்லாம் தப்பு,கொஞ்ச நாள் தான கல்யாணத்துக்கப்புறம் நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன்..இப்போ வேண்டாம் ப்ளீஸ்..கண்ணில் ஒரு துளி நீர் எட்டிப்பார்த்தது,அவ்வளவுதான் கரைந்தேவிட்டான் ராம்..

ஹே லூஸு சும்மா விளையாடிப் பாக்கலாம்நு பாத்தா என்ன நீ என்னை வில்லன் ஆக்கிருவ போலயிருக்கு..இவ்ளோதான் நீ என்ன புரிஞ்சுக்கிட்டதா முதல்ல கண்ணைத் தொட..என்றபடியே விலகி நின்றான்..மகியோ போன உயிர் மீண்டு வந்ததாய் உணர்ந்தாள்..

என்னடா மகி இப்படி நடுங்குற நா தானதைரியமா தள்ளிவிட்டு நாலு அடி அடிப்பநு எதிர்பாத்தேன் நீ என்னடானா என்று சிரித்தான்,

போங்க ராம் நீங்க ரொம்ப மோசம் என்றபடியே கண்ணைத் துடைத்து கொண்டாள்..

இங்க வா இப்படி உக்காரு என்று கட்டிலில் அமரவைத்தவன் அவளை உரசியவாறே அருகில் அமர்ந்தான்..இதோ பாரு மத்ததெல்லாம் தான் கல்யாணத்துக்கு அப்புறம் பக்கத்துல உக்காரதுக்கெல்லாம் நோ ரெஸ்ட்ரிக்ஷன் சொல்லிட்டேன்..

வெட்கத்தோடு அழகாக சிரித்தாள்..அவள் கைகளை தன் கையோடு சேர்த்து கொண்டு,மகி இனி உனக்கு எல்லாமுமாய் நா இருக்கேன்..எதுக்கும் கவலை படாத..அண்ட் உங்க அம்மாகிட்ட வந்து நானே பேசுறேன்..

ம்ம்ம் நானே சொல்லனும்நு நெனச்சேன்..எவ்ளோ சீக்கிரம் முடியுமோ கல்யாணம் பண்ணிக்கலாம் ராம்..உங்களைவிட்டுட்டு என்னால இருக்க முடியாது..

எனக்கு எதாவது ஆய்டுமோநு பயப்படுறியா மகி..

நிச்சயமா இல்ல ராம்..ஆனா எது நடந்தாலும் நா உங்க பக்கத்துல இருக்கணும்நு நெனைக்குறேன்..பயத்தை மறைத்து தெம்பாய் பேசினாள்..ஏனோ அவளின் ஆள்மனது ஏதோ ஒன்று நடக்கப்போவதாய் கூறிக் கொண்டேயிருந்தது..

சரிடா அப்போ நீ கன்பார்ம் பண்ணு உங்க ஊருக்கு போய் அம்மாவ பாத்துட்டு வந்துரலாம்..

இல்ல ராம் நெக்ஸ்ட் வீக் அம்மாவே இங்க வராங்க என்ன பாக்குறதுக்கு அப்போ பேசிக்கலாம்..

சரிடா,நீ தைரியமாயிரு நா உன் கூடவேதான் இருக்கேன் என்றவாறு தோளில் சாய்த்துக் கொண்டான்..

கதவு தட்டும் ஓசையில் வேகமாக எழுந்து நின்றவள் ராஜியை கண்டதும் அவர் அருகே சென்று நின்று கொண்டாள்..

என்னடா ஆளையே காணுமேநு வந்தேன்,என்று மகனை நோட்டமிட்டவாறே மகியை கை பிடித்து கொண்டார்..

ம்மாமாமா மானத்த வாங்காதீங்க ஏற்கனவே உங்க மருமக சிங்கம் புலிய பாத்தா மாதிரி ஓடுறா இதுல நீங்க வேற ஏத்திவிடாதீங்க.

மகியோ வெட்கத்தில் நெளிந்தாள்..ராஜியோ தன் மகனை செல்லமாக கொட்டினார்,வாலு பாவம்டா சின்ன பொண்ணு உன்னோட துப்பறியுர மூளையெல்லாம் அவகிட்ட காட்டாத..நீ வாம்மா சாப்பிடலாம் என்று கீழே அழைத்துச் சென்றார்..அந்நேரம் பரணியிடமிருந்து அழைப்பு வரவே அவனையும் வீட்டிற்கு அழைத்தான் ராம்..

ராமின் அக்கா தன்விகாவும் வந்துவிட இருவருக்கும் அறிமுக படலம் முடிந்தது..

ச்ச யு ஆர் சூப்பர் கேள் மகி,இந்த சாமியாரையே லவ் பண்ண வச்சுட்டியே -தன்விகா..

என்னக்கா ஆபீஸ்ல தான் கிண்டல் பண்றாங்கநா நீங்க கூடவா..-மகி..

தன்விகா மிகவும் தோழமையோடு பழகியது மகிக்கு மிகவும் பிடித்துவிட்டது அக்கா அக்கா என்று அவளுடன் ஒட்டிக் கொண்டாள்..

அட நீ வேறம்மா அவன் உண்மையான சுபாவமே உனக்கு தெரியாது அதான் சார் உன்ன பாத்த அடுத்த செகண்ட்ல இருந்து ஆளே மாறிட்டாரே..

அப்படி சொல்லுங்கக்கா..ரெண்டும் ஆபீஸ்ல அலம்பல் தாங்கல என்றபடியே உள்ளே நுழைந்தான் பரணி..

வாடா ஜுனியர் சாமியாரே..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.