03. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி
அவள் கண்ணடித்தவுடன் திகைத்துத்தான் போய்விட்டான் ரூபன். இது என்னடா வம்பா போச்சு என்று எண்ணிக் கொண்டிருக்கையில் ....
அதுவரை ஜீவனின் கையிலிருந்த தன் சடையை அவனிடமிருந்து இழுக்கவே முடியாத மாதிரி முகத்தை பாவம்போல் வைத்துக் கொண்டிருந்தவள் சட்டென்று வெகு லகுவாக பிடுங்கி எடுத்துக் கொண்டு சோஃபாவில் வந்து அமர்ந்து ரூபனைப் பார்த்து முறைத்தாள்.
"போங்கத்தான், உங்களால என் சண்டைப் போடற மூட் போயிட்டு"....
கேட்டவனுக்கு அவள் செய்கைப் பார்த்து வியப்பாக தோன்றிற்று கூடவே ரொம்ப வாலு தான் போலயே எனத்தோன்றி சிரிப்பாகவும் தான். அத்தான் என்ற அழைப்பிலேயே அவள் யாரென்று புரிந்துக் கொண்டான். இருவருக்கும் என்ன பிரச்சினை என்று அறிந்துக் கொள்ள ஆர்வம் வந்ததால் அவளருகே அமர்ந்தான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
இத்தனை நாளாய் அந்த ரூமுக்குள் அடைந்துக் கிடந்தவன் இன்று சகஜமாக ஹாலில் வந்து அமர்ந்ததை பார்த்த அவன் தாய்க்கு மனம் நெகிழ்ந்தது. இந்தக் குட்டிப் பொண்ணு யாரையும் லகுவாக ஆக்கிவிடுவாள் என்று மனதிற்குள் மகிழ்ந்துக் கொண்டார்.
"அனிக்குட்டி தானே நீ, ஜாக்குலின் அக்கா மேரேஜ் அன்னிக்கு பார்த்தது".....என்று ஆரம்பித்தான்.
".............."
பேசாமல் அமர்ந்திருந்தவளைப் பார்த்து, " என்னாச்சு நீ பேச மாட்டிக்க, உங்கிட்ட பேசுரேன்னு அங்க ஒருத்தன் என்னை முறைச்சு, முறைச்சுப் பார்த்துட்டு இருக்கான்".
"என்னைக் குட்டின்னு சொல்ற யார் கூடவும் நான் பேசக் கூடாதுன்னு டிசைட் பண்ணிருக்கேன்."
"அண்ணா நீ குட்டின்னே கூப்பிடு இவளை அனிக் குட்டி, ஆட்டுக் குட்டி, ப....."
"டேய்".....எழுந்து அவனைத் துரத்த ஆரம்பித்து விட்டாள் அவள்.
"இன்னிக்கு இவங்க சண்டைல மாட்டிகிட்டியா நீ " என்றுக் கேட்டவாறு அப்போதுதான் தன் அலுவல் முடித்து வந்த தீபன் அவன் அருகில் அமர்ந்தான் .
"ஆமாண்ணா" என்றுச் சொல்லி தன் அறைக்குள் செல்ல முயன்றவனை தடுத்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டு தீபன் அளவளாவினான். தன்னை சகஜப் படுத்த அவன் எடுத்துக் கொள்ளும் முயற்சியை அறிந்தவனாக ரூபனும் அவனோடு உட்கார்ந்து பேச ஆரம்பித்தான்.சி ஏ முடித்து தனக்கென தனி அலுவலகம் அமைக்கும் முயற்சியில் இருந்த தீபனிடம் அதுக் குறித்து விபரங்கள் கேட்டுக் கொண்டிருந்தான்.
கொஞ்ச நேரம் கழித்து சண்டைப் போட்டுக் களைத்த இருவரும் அவர்கள் அருகே வந்தனர். அனிக்கா தீபனின் அருகில் அமர்ந்துக் கொண்டாள். ஜீவன் ரூபனின் அருகில் அமர்ந்துக் கொண்டான்.
சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டவள் தீபனிடம் முறையிட்டாள்.
"பெரிய அத்தான் ரூபன் அத்தான் கிட்ட சொல்லி வைங்க நான் இங்க ஃபைட் செய்ய வரும்போது என்னை டிஸ்டர்ப் செய்யக் கூடாதுன்னு".....
பெரியவர்கள் இருவருக்கும் அதைக் கேட்டுச் சிரிப்பு வந்தது என்றால், சின்னவனுக்கு கோபம் வந்து விட்டது.
"உனக்கு சண்டைப் போட நான் தான் கிடைச்சேனா".....
ஆமா, பிறகு நான் வேற யாருக் கிட்ட போய் சண்டைப் போடுவேன்....எங்கூட சண்டைப் போட வீட்ல யாருமே இல்லலா"..........
கோபத்தில் உறுமிக் கொண்டு அவள் மேல் பாய இருந்தவனை சமாளிப்பது ரூபனுக்கு வெகு சிரமமாக இருந்தது ...
அங்கே நடப்பது எதையுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவள் தொடர்ந்தாள்.
"இப்படித்தான் அத்தான் எங்கூட வீட்ல யாருமே சண்டைப் போடுறதில்லங்கிறதனால, இனிமே வரப் போறவங்க கூடவாவது சண்டை போடலானு ரொம்ப நாளா பிளான் செய்தேன்.
"பிளானா"........ மூவருக்கும் அவள் என்னச் சொல்லப் போகிறாள் எனக் கேட்க ஆர்வம் வந்து விட்டிருந்தது.
"லாஸ்ட் மன்த் கிறிஸ் அண்ணா எங்கேஜ்மெண்ட் இருந்துச்சில்ல அப்போ பிரபா அண்ணிக்கிட்ட போய் எங்க அம்மா ரொம்ப பொல்லாதவங்க, சண்டைப் போடுவாங்க , திட்டுவாங்கன்னு எல்லாம் கதை கதையா சொன்னேனா...."......
பெரியவர்கள் இருவருக்கும் அதைக் கேட்டு முகத்தில் ஈயாடவில்லை...
சாரா அத்தைக்கு வீட்டுக்குளேயே இப்படி ஒரு எதிரியா என்ற பாவனையோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"அப்புறம் என்னாச்சி"......கதையில் லயித்து தங்களுக்கிடையேயான சண்டையை மறந்து ஜீவன் கேட்டான்.
அவங்க என்னை கிட்ட கூப்பிட்டு...
கூப்பிட்டு...
"கன்னத்தில முத்தம் கொடுத்து, நீ உங்க அண்ணன் சொன்ன மாதிரியே ரொம்ப நாட்டியா இருக்க, ஸ்வீட் கர்ள்னு சொன்னாங்க"......என்று முகம் சுளித்தாள்.
சிரித்தால் கோபப் படுவாளோவென இவர்கள் இருவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு இருக்க , ஹா ஹா ஹாவெனச் சிரித்து அடி வாங்கிக் கொண்டான் ஜீவன், மறுபடி அங்கு ஒரு யுத்தம் தொடங்கியது இவற்றையெல்லாம் நினைவில் கொண்டு வந்தவனுக்கு எப்போது கண்கள் சுழற்றியது, எப்போது தூக்கம் வந்தது என்றேப் புரியவில்லை.