“இல்ல ஆண்டி, அதலாம் வேண்டாம் தூங்கட்டும் பாவம். நேற்று முழுவதும் அழுதுட்டு இருந்தாளே அதான் எப்படி இருக்கா னு பார்த்துவிட்டுப் போகலானு வந்தேன். நான் கிளம்புறேன் ஆண்டி ஆபிஸ் பஸ் வந்துடும்” என்றாள் திவ்யா.
“இருடா திவ்யா சுடா இட்லி, உனக்கு புடிச்ச புதினா சட்னி தான் பண்ணிருக்கேன். சாப்டுட்டு போ” என்றார் உரிமையோடு.
“இல்ல ஆண்டி. இப்போதான் வீட்ல சாப்டேன். சட்னி மட்டும் எடுத்து வைங்க. ஈவினிங் வந்து எடுத்துகுறேன்” என்று தனக்கு பிடித்த சட்னியை விட மனம் இல்லாமல் கூறினாள் திவ்யா.
“இப்போ அரைத்தது எதுக்குடா நீ சாயங்காலம் வா, ஃப்ரெஷா அறைச்சித் தறேன். விஷ்ணு நீயும் தான் பா வந்துடு” என்றார் பாசத்தோடு.
சரி என்பது போல் தலையாட்டி விட்டு இருவரும் நகர்ந்தனர் வாசலை நோக்கி. வாசலை நெருங்கியவுடன்
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்...
“இந்த லூசு இல்லாம வேளைக்கு போகுரதுக்கே என்னமோ மாதிரி இருக்கு விஷ்ணு. எதாவது தொன தொன னு பேசிட்டே வருவா. ஆபிஸ்லயும் பக்கதுலயே ஒக்காந்துக்கிட்டு எதாவது சேட்டை பண்ணிட்டே இருப்பா. இப்போ திடீர் னு அது எல்லாம் இல்ல னு நினைக்கிறப்போ ஒரு மாதிரி கஷ்டமாகத்தான் இருக்கு” என்று கூறும்போதே அவள் கண் கலங்கியது.
பத்ர காளி, சிடு மூஞ்சி, கோபக் காரி என்று எல்லாம்தான் திவ்யாவை பற்றி நினைத்திருந்தான். ஆனால் அவள் இப்படி உருக்கமாய் பேசும் போது அவனுக்கே என்னவோ போல் தான் இருந்தது. அவளுக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான் விஷ்ணு.
இருவரும் பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தனர். அப்போது
“ஸாரி விஷ்ணு” என்றாள் திவ்யா.
எதற்கு தன்னிடம் மன்னிப்பு கேட்கிறாள் என்று புரியாமல் குழப்பமாய் திவ்யாவை பார்த்தான் விஷ்ணு.
தொடரும் . . .
{kunena_discuss:906}