“ஹேய்… செம ஹேப்பியா இருக்கு தெரியுமா?...” என தைஜூவின் கைகளை பிடித்து சுற்றிக்கொண்டிருந்தாள் சதி…
“ஹேய்… சதி… தலை சுத்துதுடி… போதும்…” என தைஜூ சொன்னதும்,
“சரி… சரி.. அழாத…” என அவள் கைகளை விடுவித்தாள் சதி…
அவள் விட்டதும், என்னடி இப்படி தலைசுத்துது… என தடுமாறி விழப்போனவளை, சட்டென்று தாங்கிக்கொண்டான் இஷான்….
இருவரும் ஒருவரிடத்தில் மற்றொருவர் கரைந்து கொண்டிருக்க,
“ஹலோ அண்ணா… நான் இங்க தான் இருக்குறேன்…” என சதி குரல் கொடுக்க, அதில் தெளிந்த தைஜூ, சட்டென இஷானின் பிடியிலிருந்து அகன்றாள்…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...
படிக்க தவறாதீர்கள்...
“குட்டிச் சாத்தான்… மெதுவா சுத்தமாட்ட… நல்ல வேளை நான் வந்தேன்… இல்லன்னா என்ன ஆகியிருக்கும்?...”
“என்ன ஆகியிருக்கும்?.. ஒன்னும் ஆகாது… நான் பிடிச்சிருப்பேன் என் ஃப்ரெண்டை…”
“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…”
“டேய்… அண்ணா… என்ன?... ரொம்ப ஓவரா போற?... நீ இங்க வந்தேன்னு அப்பாகிட்ட சொன்னேன்னு வை… அவ்வளவுதான்… என்ன சொல்லட்டா?...” என அவள் மிரட்ட,
“ஹைய்யோ… என் செல்ல சதில்ல நீ… அப்படி எல்லாம் சொல்லலாமா?... அண்ணன் பாவமில்லையா?...”
“ஆ… அது… அப்படித்தான் அடங்கி பேசணும்… அதைவிட்டுட்டு குரல் உயர்த்தின…” என அவள் விரல் நீட்ட, தைஜூ சிரித்துவிட்டாள்…
“சரிங்க மகாராணி… இப்போ கொஞ்ச நேரம் என் வருங்கால மனைவி கிட்ட பேச உங்க அனுமதி கிடைக்குமா?...”
“பரவாயில்லையே… உடனே புரிஞ்சிகிட்டீயே… ஹ்ம்ம்… பொழைச்சுப்போ… பேசிட்டு சீக்கிரம் வந்து சேரு…” என தமையனிடத்தில் சொல்லியவள்,
“ரொம்ப வாலாட்டினா ஒருகுரல் கொடு தைஜூ… நான் வந்து இவனை பார்த்துக்கறேன்…” என தைஜூவிடத்தில் கூற, அவளும் சரி என்றாள்…
சதி வெளியே போகட்டும் என காத்திருந்தவன், அவள் சென்றதும், கட்டிலில் ஹாயாக அமர்ந்தான்…
“ஹப்பாடா… குட்டிச்சாத்தான் போயிட்டு… வாய் வாய்… என்ன வாய் பேசுறா?...” என அலுத்துக்கொண்டவன்,
“ஆமா அதென்ன அந்த வாலு, என்னை சொன்னா உனக்கு சிரிப்பு வேற வருது?...” என அவன் எழுந்து அவளை நெருங்கி கேட்க, அவள் தைரியமாக நின்றிருந்தாள்…
அவளருகே மேலும் நெருங்கியவன், “உனக்கு பயமா இல்லையா? போலீஸ்காரனை பார்த்து?...” என கேட்க,
“நான் தப்பு செய்யலையே… அப்புறம் எதுக்கு பயப்படணும்?...”
“ஓஹோ.. அப்படிங்களா மேடம்… அப்போ நான் தப்பு செஞ்சா பயப்படுவீங்க?...” என அவளைப் பார்க்க, அவள் முகம் சிவந்தாள்…
“நான் போறேன்…” என நகரப்போனவளின் கையைப்பிடித்து அவன் இழுக்க, அவள் அவன் மேல் சரிந்தாள்..
தன் மேல் சரிந்தவளை அப்படியே அவன் இறுக்க, அவள் முணகினாள் வேண்டாம் என…
“ஒரே ஒரு தப்பு அதும் முத்தமா செஞ்சிடுறேன்… ஒகேயா?...” என அவன் அவள் முகம் நோக்கி குனிய,
“நான் சதியை கூப்பிடுவேன்…” என்றாள் அவள், அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளிக்கொண்டு…
“ஓ… அப்படியா?... எங்க கூப்பிடு பார்ப்போம்…” என அவன் சொன்னதும், முகத்தினை அவனது நெஞ்சில் மறைத்துக்கொண்டாள் அவள்…
அப்படியே அவளை அணைத்துக்கொண்டு நின்றவன், மெல்ல அவளை விடுவித்து அவளையேப் பார்க்க, அவள் அவனை வித்தியாசமாக பார்த்தாள்…
“என்னை நம்பி விட்டுட்டு போன என் குட்டிபிசாசுக்கும், என்னை நம்பி இங்க இருக்குற உனக்கும், நான் நம்பிக்கை கெடுக்குற மாதிரி நடந்துக்க மாட்டேன்… சரியா?...”
“உன்னைப் பார்க்கணும்னு வந்தேன்… பார்த்துட்டேன்… பேசணும்னு நினைச்சேன்… அதுக்குள்ள உன்னை கட்டிகிட்டேன்… தப்புதான்… சாரிம்மா….” என அவன் கெஞ்ச… அவள் எதுவும் பேசவில்லை…
“என்னம்மா பேச வேண்டாமா இப்போ?... நான் போகணுமா?...” என அவன் கேட்க அவள் பதில் சொல்லவில்லை…
“எனக்கு உன் நிலைமை புரியுது… சாரிடா… நான் பண்ணினது தப்புதான்… சாரி…” என அவன் நகரப்போக, அவனை பின்னிருந்து கட்டிக்கொண்டாள் அவள்…
சற்று நேரம் அவளது அணைப்பிலிருந்தவன், மெல்ல திரும்பி, அவள் முகம் பார்க்க, அவள் வெட்கம் கொண்டாள்…
“இப்போ சதியை கூப்பிடேன்…” என அவன் கிண்டல் செய்ய, அவள் அவனது கன்னத்தில் எம்பி முத்தம் கொடுத்துவிட்டு, “கூப்பிடமாட்டேனே….” என சொல்ல… சிரித்துக்கொண்டே அவளை அணைத்து முத்தமிட்டான் அவனும் அவளது கன்னத்தில்…