“எடுடா… கையை…” என ஜெய் கிட்டத்தட்ட உறும,
“முடியாதுன்னா என்ன செய்வ?...” என்றான் அந்த மிருகம்…
“என் பொறுமையை சோதிக்காம கையை எடுடா…” என ஜெய் கோபத்தில் பற்களை கடிக்க,
“கோபம் வருதா?.. உனக்கு?... வரட்டும் நல்லா வரட்டும்… இதே மாதிரி தான என் நண்பனை நீ அடிச்சு நார் நாரா தொங்கப்போட்டப்போ எனக்கும் வந்திருக்கும்… உன் கோபத்தோட எல்லையை நீ காட்டிட்ட… இப்போ என் கோபத்தோட எல்லையை நான் காட்ட வேண்டாமா?...”
“இப்போ நீ கையை எடுக்கலை இந்த இடத்துலயே உன்னை கொன்னு புதைச்சிடுவேன்டா நாயே…”
“அதையும் பார்ப்போம்டா… என்னமோ சொல்லிட்டிருந்த இத்தனை நாள்… நான் தனிமரம், எனக்குன்னு யாரும் உறவுகள் இல்லைன்னு… இப்போதான தெரியுது… இவ்வளவு அழகான ஒரு உறவு கொடுக்குறதுக்கு தான் கடவுள் உனக்கு இத்தனை நாள் எந்த உறவும் கொடுக்கலை போல… ஹ்ம்ம்… என்ன பண்ண?... இப்போ அந்த உறவோட உயிரும் என் கையில…” என்றவன் தன்னிடம் இருந்த கத்தியை சதியின் கழுத்தில் அழுத்தி வைக்கப்போக
“அவ மேல சின்னதா கீறல் பட்டாலும் உன்னை இந்த நிமிஷமே இல்லாம பண்ணிடுவேன்…” என்றான் ஜெய் கண்ணில் கொலைவெறியோடு…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...
படிக்க தவறாதீர்கள்...
“ரிலாக்ஸ் ஜெய்… எதுக்கு இவ்வளவு கொலைவெறி… நான் உன்னை கொல்லத்தான் வந்தேன்… ஆனா வந்த இடத்துல தான் தெரியுது உன் உயிர் உங்கிட்ட இல்ல… இதோ இங்க இருக்குற இவகிட்ட இருக்குன்னு… சோ அத நான் உடனே எடுத்துட்டா, உனக்கு நான் பட்ட வலியும் வேதனையும் புரியாம போயிடுமே… அதனால இவளை இப்போ எதுவும் நான் செய்யமாட்டேன்… ஆனா ஒவ்வொரு நிமிஷமும் அவளுக்கு எதாவது ஆகிடுமோன்னு நீ பயப்படணும்… உன் கண்ணுல பயம் தெரியணும்டா… அதை நான் பார்த்து ரசிக்கணும்…”
“அதை பயம் தெரியுற அன்னைக்கு பார்த்து ரசி… இப்போ எடுறா கையை…” என ஜெய் வேகமாக இரண்டடி அடி முன்னே வைக்க,
“ஹே… ஸ்டாப்… ஸ்டாப்… நானே அவளை உங்கிட்ட ஒப்படைக்குறேன்…” என்றவன், ஜெய்யின் பார்வை தன்னிடமே இருப்பதை உணர்ந்து சதியை ஜெய்யின் வலதுபக்கம் தள்ளிவிட்டுவிட்டு ஓட, அவனை நோக்கி ஓட ஆரம்பித்தவன், சற்று நேரத்திலேயே திரும்பி சதியிடம் வந்தான் வேகமாய்…
தொடரும்
{kunena_discuss:1001}