(Reading time: 12 - 24 minutes)

தை வாங்கி அலட்சியமாக படுக்கையின் மீது எறிந்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு வந்தவனின் பார்வையில் மறுபடியும் விழுந்தது அந்த பூங்கொத்து. மனம் கேட்கவில்லை  அதை கையில் எடுத்தான் அவன். அதனோடு ஒரு கடிதம் வேறு...

இது இவனுக்கு புதிதில்லை. கடந்த சில வருடங்களாகவே நடந்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் தான் இது. அது எப்படி அறிந்துக்கொள்வானோ அவன்??? இவன் எங்கே இருக்கிறான் என்ன செய்துக்கொண்டிருக்கிறான் என்பது எப்போதும் அந்த டாக்டருக்கு தெரியும்.

வாரம் ஒரு முறையாவது பூங்கொத்து வரும். ஏதாவது ஒரு வாழ்த்து வரும், சின்ன சின்ன பரிசுகள் வரும்.  இவனுடைய கரம் ஒரு முறை அந்த பூங்கொத்தை மெதுவாக வருடியது. அவனை பார்த்தே பல நாட்கள் ஆகின்றன. பார்த்தால் மட்டும் என்னவாம்??? இவன் அவனுடன் பேசி விடவா போகிறான்??? அதனுடன் இருந்த அந்த கடிதத்தை பிரித்தான்.

'டேய்.. உனக்கு அனுப்பின இந்த பூ.. கிஃப்ட் எல்லாம் ஒரு பொண்ணுக்கு அனுப்பி இருந்தேன்னு வை.... இன்னேரம் பொண்டாட்டி ரெண்டு, மூணு புள்ளை குட்டின்னு செட்டில் ஆகி இருப்பேன்...என் தலை எழுத்து உனக்கு பொக்கே அனுப்பியே எனக்கு வயசாயிட்டிருக்கு.. கொஞ்சமாவது சிரிடா...'  கிறுக்கலான அவனது கையெழுத்தில் கடிதம்.

கடிதத்தை படித்தவனின் இதழ்கள் அழகான சிரிப்பில் மலர்ந்து விரிந்தன.

'எருமை மாடு...' சொல்லிக்கொண்டே நிமிர்ந்தவனின் கண்கள் அடுத்த நொடி சரேலென விரிந்தன.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்...

அவன் கண்கள் எதிரிலிருந்த கண்ணாடியில் பதிந்திருக்க அதில் தெரிந்தது அந்த முகம்!!!! அறைக்கதவில் சாய்ந்து நின்றிருந்தவனின் முகம்!!! மலர்ந்த முகத்துடன் இவனையே பார்த்திருந்தான் அவன்.

அங்கே நின்றிருந்தவன் அவனே தான்!!! அதே எருமை மாடு தான். விறுவிறுவென அலைபாயும் கண்களும், இதழ்களில் குறும்பு , புன்னகையுமாக நின்றிருந்தான் அவன்.

அதுவரை இதழ்களில் ஓடிக்கொண்டிருந்த கஷ்டபட்டு விரட்டி விட்டு, முகத்தில் மாற்றத்தை பூசிக்கொண்டு அவனை கண்டுக்கொள்ளாதவனாக சீப்பை எடுத்து தலை வார துவங்கினான் இவன்.

'என்னதான் நீ இப்போ முகத்தை டைப் டைப்பா மாத்தினாலும் நீ சிரிச்சதை நான் பார்த்துட்டேனே... என்றபடியே இவன் அருகில் வந்து நின்றான் அவன். 'நீ சிரிச்சு நான் ஜாஸ்தி பார்த்ததில்லைடா...' அவன் குரலில் இருந்தது பாசம் மட்டுமே.

பதிலில்லை இவனிடம். ஏதேதோ நினைவலைகள் இருவரிடத்திலும். இவன் சட்டையை சரி செய்துக்கொள்வதும் பெர்ஃப்யூம் அடித்துக்கொள்வதுமாக இருக்க... சட்டென இவன் தோள் தொட்டு திருப்பினான் அவன். இருவர் கண்களும் ஒன்றை ஒன்று சில நொடிகள் ஊடுருவின...

'ப்ளீஸ் டா... நான் என்ன தப்பு பண்ணேன்??? என்கிட்டே ஏன்டா பேச மாட்டேங்கற...'

................................

'வி......ஷ்......வா........ன்னு என் பேரையாவது சொல்லேன்....'

........................................

'டேய்.... பரத்......... அட்லீஸ்ட்.... எருமை மாடுன்னாவது சொல்லுடா...'

விஷ்வா சொல்லிக்கொண்டே இருக்க பேசாமல் திரும்பி நகர்ந்து அங்கே சார்ஜரில் இருந்த தனது மொபைலை எடுத்து துழாவ துவங்கினான் பரத்.

'பேச மாட்டியா? சரி கையை குடு முதல்லே.... அவர்ட் எல்லாம் வரப்போகுது.... ரொம்ப சந்தோஷமா இருக்குடா எனக்கு...' விஷ்வா கையை நீட்ட கண்களை கூட நிமிர்த்தவில்லை பரத்,

'ம்... சரி...' என்றான் விஷ்வா அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்தபடி... 'இன்னைக்கு உன்னை பேச வைக்காம இங்கிருந்து நான் போறதில்லைங்கற முடிவோட தான் வந்திருக்கேன்...'

ஒரு பெருமூச்சு மட்டுமே எழுந்தது பரத்திடம். 'இது பல வருட மௌனம். இதெல்லாம் அத்தனை சுலபமாக கலையாது....'

சோபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்தபடி மெல்ல சொன்னான் விஷ்வா.........

'அ....ப....ர்...ணா'  சரேலென நிமிர்ந்தான் பரத்.

'என்னடா அப்படி பார்க்கிற???" அவன் முகத்தை படித்தபடியே விஷ்வா கேட்க தனது முகத்தில் பரவிய தவிப்பின் ரேகைகளை மறைக்க நிறையவே சிரமப்பட்டுக்கொண்டிருந்தான் பரத்.

'இவனுக்கு அபர்ணாவை எப்படி தெரியும்???' கேள்வி பிறந்தது அவனுக்குள்.

'இவனுக்கு எப்படிடா அபர்ணாவை தெரியும்னு யோசிக்கறியா??? உன்னைவிட எனக்கு அபர்ணாவை நிறையவே தெரியும்...'

பகீரென்றது பரத்துக்கு 'நேற்று இரயிலில் அவளுடன் போனில் பேசியது இவன்தானோ??? இறைவா!!!'

'பார்த்தியா??? உடனே நிறைய கணக்கு போடறே பார்த்தியா??? நீ நினைக்கிற மாதிரி க்ளோஸ் இல்ல நாங்க ரெண்டு பேரும்... இது வேறே..' அடுத்த நொடியில் அவன் கண்களில் பரவிய நிம்மதியின் ரேகைகைகள் விஷ்வாவின் இதழ்களில் சிரிப்பை விதைத்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.