(Reading time: 12 - 24 minutes)

'நான் குரங்கா ... பிசாசு...' என்று ஆரம்பித்து  அவளுக்கு ஏதாவது பதில் சொல்லி இருப்பான் தான். இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லை.

அவனிடம் சொல்லி விட்டு வந்து விட்டான் தான். ஆனால் இவள் எப்படி எடுத்துக்கொள்வாள் இதை??? புரியவே இல்லை..

அவன் முகம் முழுவதும் தயக்க மேகங்கள். குழப்ப கோடுகள். அதை எல்லாம் தாண்டி அவள் முகம் பார்த்த மாத்திரத்தில் அவனிடம் எழுந்தது பளீர் புன்னகை. அதே புன்னகை அவளிடமும் தொற்றிக்கொண்டது.

'ஹலோ... உயிரோட தான் இருக்கியா??? ரெண்டு நாள் ஆச்சு நீ போன் பண்ணி...'

'இல்லடா கொஞ்சம் வேலை....' உதடுகள் ஏதோ சொல்லிக்கொண்டிருக்க......  யோசனையுடனே இருந்தான் அவன். 'விஷயத்தை எப்படி துவங்குவது இவளிடம்.????

'டாக்டர் சார்... என்ன ஆச்சு என்னாலே ஏதாவது வேலை ஆகணுமா??? என்ன திரு திருன்னு முழிக்கறீங்க??

'அது வந்து ... மழை வரா மாதிரி இருக்கில்ல??? கார்லேயே போயிடுவோமா??? மெது மெதுவாக கேட்டான் அவன்.

'ஹலோ... முதல்லே நாம எங்கே போறோம் அதை சொல்லு...' அவன் தயக்கத்தை படித்தபடியே கேட்டாள் அவள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

'அது......... இந்த இன்விடேஷன் பாரேன்...' அவன் அதை நீட்ட அதை வாங்கி பார்த்தவளின் முகத்தில் பல வகை மாற்றங்கள். நிறைய உணர்வுகள்.

அந்த அழைப்பிதழின் முகப்பில் கையில் கிட்டாருடன் சிரித்துக்கொண்டிருந்தான் பரத்!!! கொஞ்சம் விக்கித்து போய்  நின்றாள் அபர்ணா!!!

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பக தோட்டத்திலே 

பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய் 

வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி....

அந்த பாடல் காதில் ஒலிப்பது போலே ஒரு உணர்வு அபர்ணாவுக்கு...

Episode # 01

Episode # 03

தொடரும்......

{kunena_discuss:982}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.