'ரெண்டு மூணு நாள் முன்னாடி உன் ஃப்ரெண்ட் ஒருத்தன் சிக்கினான். நான் சாதாரணமா அவன் வாயை கிண்டிட்டு இருந்தேன்... அப்போ திடீர்னு உன்னோட ஃபிளாஷ் பேக் எல்லாம் வெளியே வர ஆரம்பிச்சது. சரி பொண்ணு யாருடான்னு விசாரிச்சா... நம்ம அபர்ணா... அப்போதான் புரிஞ்சது நீ நம்ம கிட்டே வசமா மாட்டி இருக்கேன்னு...'
பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான் பரத். பதில் எதுவும் இல்லை அவனிடமிருந்து.
'சரி ......... நான் இன்னைக்கு ஈவ்னிங் அவார்ட் ஃப்ங்ஷனுக்கு அபர்ணாவை கூட்டிட்டு வந்தா நீ எனக்கு என்ன தருவே???
நம்ப முடியவில்லை. நம்பவே முடியவில்லை பரத்தால். காலையில் சட்டென கண்களை விட்டு மறைந்து போனவள் மறுபடியும் என் கண் முன்னே வரப்போகிறாளா???
'என்னடா நம்ப மாட்டியா??? நிஜமா தான்டா. ஒரு இன்விடேஷன் குடு எனக்கு...' விஷ்வா சொல்லி முடிக்கவில்லை. அடுத்த நிமிடத்தில் அவன் கைக்கு வந்திருந்தது அழைப்பிதழ் பரத்தின் கையெழுத்துடனான அந்த விழா அழைப்பிதழ்..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்...
இதுவரை எதுவும் காதிலேயே விழாதது போலவே நின்றிருந்தவனிடம் எங்கிருந்து வந்ததாம் இந்த வேகம்??? காதல் இப்படி எல்லாம் செய்யுமா என்ன??? வியப்பாக இருந்தது விஷ்வாவுக்கு . இதுவரை அனுபவம் இல்லையே அவனுக்கு!!!!
சில நொடிகள் அவனையே பார்த்திருந்தவன் சின்ன குறும்பு புன்னகையுடன் சொன்னான்.
'நான் மட்டும் வரேன்னு சொன்னா எனக்கு இன்விடேஷன் குடுப்பியா டா.. இப்போ என்னடான்னா அடுத்த நிமிஷம் ... சரி... விடு......... நான் அவளை கூட்டிட்டு வரேன். ஆனா ஒரு கண்டிஷன். நீ இப்போ என்னை விஷ்வானு கூப்பிடணும்... ' புருவம் உயர்த்தி கண் சிமிட்டினான் விஷ்வா.
இத்தனை நேரம் மலர்ந்திருந்த பரத்தின் முகத்தில் சட்டென ஏதோ ஒரு மாற்றம். பார்வையை திருப்பிகொண்டான் அவன்.
'சரி வேண்டாம்னா போ. உன் இன்விடேஷனை நீயே வெச்சுக்கோ... நான் கிளம்பறேன்...' என்றபடியே எழுந்து திரும்பி அவன் இரண்டடி எடுத்து வைக்கவில்லை..
'ஹேய்... விஷ்வா...' அழைத்து விட்டிருந்தான் பரத்!!! அழைத்தே விட்டிருந்தான் அவன்!!! வியந்து, அசந்து நெகிழ்ந்து திரும்பினான் விஷ்வா.
எத்தனை வருட தவம் இந்த மௌனம் என தெரியும் விஷ்வாவுக்கு. அதன் பின்னால் இருக்கும் நியாமான காரணமும் தெரியும்தான். அவனை பேச வைக்க இவன் செய்த இத்தனை வருட முயற்சியில் எதுவுமே பலிக்காத நிலையில்.???
'எனக்கு சரியா கேக்கலை. எங்கே மறுபடியும் சொல்லு...'
'விஷ்வா...' என்றான் பரத் மறுபடியும்... அழுத்தம் திருத்தமாக!!! அகமகிழ்ந்து போனான் விஷ்வா.
மொத்தமாக வியப்பில் மூழ்கி இருந்தான் அவன். சற்று நேரம் முன்னால் அத்தனை திமிராக டிரைவரிடம் பணம் கொடுத்தவனா இவன்??? ஒரே நிமிடத்தில் இப்படியா மாறிப்போனான்???
அவனை இமைக்க மறந்து பார்த்தபடியே கேட்டான் விஷ்வா 'உனக்கு அபர்ணாவை இவ்வளவு பிடிக்குமாடா??? குரல் நெகிழ்ந்து கிடந்தது விஷ்வாவுக்கு.
சின்ன புன்னகையுடன் கூடிய அவனது தலை அசைப்பே விஷ்வாவுக்கு பதிலானது.
'அவ என்னோட மாமா பொண்ணு தான்டா.' என்றான் விஷ்வா. ஒரு முறை சட்டென உயர்ந்து தாழ்ந்தன பரத்தின் புருவங்கள்.
'கூட்டிட்டு வரேன்டா.. கண்டிப்பா கூட்டிட்டு வரேன்.. இப்போ டைம் ஆச்சு. கிளம்பறேன் ..' ஒரு முறை அவன் கையை பிடித்து அழுத்தி விட்டு நகர்ந்தான் விஷ்வா. ஆனால் அபர்ணாவின் மனதில் என்ன இருக்கிறது என்று இதுவரை அறிந்திருக்க வில்லையே அவன் ???
அன்று அலுவலகம் விடுமுறை என்பதால் வீட்டில் தான் இருந்தாள் அபர்ணா. நேரம் மாலை ஐந்தை நெருங்கிக்கொண்டிருந்தது. மொட்டை மாடியில் வானத்தை பார்த்தபடி நின்றிருந்தாள் அவள்.
கீழே அந்த கார் வந்து நின்ற சத்தம் கேட்டு கிட்டத்தட்ட கால் மணி நேரம் கடந்திருக்கும். 'இன்னும் மேலே ஏறி வர வில்லையே அவன்??? இன்னும் கேட்கவில்லையே அவன் குரல்??? இன்று என்னவாயிற்று அவனுக்கு??? வந்து விடுவான். இதோ வந்து விடுவான். நான் இருபது எண்ணி முடிப்பதற்குள் அவன் குரல் கேட்கும் பார் ..' தன்னக்குள்ளே சொல்லிக்கொண்டவள் எண்ண ஆரம்பித்தாள்.
''ஒண்ணு ... ரெண்டு............'ஏழு ..எட்டு... ஒன்பது..' அவனது காலடி ஓசை கேட்டது அவளுக்கு. சிரித்துக்கொண்டாள் அபர்ணா .'இதோ வந்து விட்டான்..' மாடிப்படிகளையே பார்த்திருந்தாள் அவள்.
அவள் முன்னால் வந்து நின்றான் அவன். அவனை ஏற இறங்க பார்த்தாள் அவள். 'சிலு சிலு காற்றில் ஆடிய அவனது கேசமும், அவனது ஸ்டைலான டி. ஷர்ட்டும், விறு விறுவென அவன்படி ஏறி வந்த வேகமும்..' அவள் இதழ்களை இன்னமும் அதிகமாக புன்னகையில் விரிய வைத்தன
அவள் முன்னால் வந்து நின்றான் விஷ்வா 'மனசுக்குள்ளே பெரிய ஹீரோன்னு நினைப்பு... குரங்கு...' சொன்னாள் அபர்ணா.
அவன் எப்போதும் போல் இருந்திருந்தால்........