"பார்த்தியா??உன் செல்ல பொண்ணு செய்யுறதை!மனசுக்கு பிடித்ததை செய்வாளாம்!அவளை பிறந்த போதே கொன்னு புதைத்திருக்கணும்!தப்பு பண்ணிட்டேன்!"
"................."
"வளர விட்டது உன் தப்பு தான்ணா!அன்னிக்கு சவால் விட்டு போகும் போதே அவ கழுத்தை நெரித்திருக்கணும்!இப்போ எப்படி வளர்ந்து நிற்கிறா பார்!!"-பல்லவியின் இதயம் சுக்கலாகிப் போனது.
அவர் தலைகுனிந்து நின்றாள்.
"அவ பேசுன ஒவ்வொரு வார்த்தையும் மறக்க மாட்டேன்!!எவ்வளவு நாள் ஆடுறான்னு நானும் பார்க்கிறேன்!"-என்றவர் கோபமாக செல்ல,ஒரு ஏளன பார்வையை பல்லவி மீது வீசி லட்சுமியும் சென்றார்.
அங்கு தனித்திருந்த தாய் மனம் எவ்வளவு தான் நொடுங்கி இருந்தாலும்,அன்று சரியாக 6 வருடங்களுக்கு முன்,தன் மகள் உதிர்த்த சபதத்தை இன்று நிறைவேற்றினாள் என்பது அவரை பெருமிதம் கொள்ளவே செய்தது.
"அடடா!என் பேத்தி தானே அது!"-மூக்கு கண்ணாடியை சரி செய்தப்படி தொலைக்காட்சியை பார்த்தார் விசாலாட்சி.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஆதித்யா சரணின் "சிவன்யா" - புத்தம் புது தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
"அத்தை!"
"சொன்னதை செய்துட்டா!!என் செல்லம்..."-தொலைக்காட்சியில் தெரிந்த தன் பெயர்த்திக்கு நெட்டி முறித்தார் அவர்.
"என்ன?அவனுக்கு அப்படியே எரிந்திருக்குமே!"
"................"
"நான் தான் அன்னிக்கே சொன்னேன்ல!அவ திரும்பி வருவான்னு!வந்துட்டா பார்!இனி எல்லாம் நல்லப்படியாகவே நடக்கும்!"-அவரது பேச்சில் உறுதி தெரிந்தது.
யார் இந்த நிர்பயா??எதற்காக சங்கரன் தன் ஈன்ற புதல்வி மேலே குரோதம் பாராட்டுகிறார்??6 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது என்ன??அவள் என்ன சூளுரை செய்தாள்???இனி என்ன நிகழ போகிறது??பின்வரும் அத்தியாயங்கள் பதில் கூறும்....!!!!
தொடரும்
{kunena_discuss:1030}