இதை கவனித்த ஒரு தன்னார்வ சமூக தொண்டு நிறுவனம்…..இதைக் குறித்து ஒரு வழக்கை தொடர்ந்திருக்கிறது உச்ச நீதிமன்றத்தில்…. அதை விசாரித்த நீதி மன்றம் இந்த செயல்கள் மூலம் நாட்டிற்கு தீமை ஏற்படுகிறது என்பது நீரூபிக்கபட்டால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என தீர்ப்பிட்டு……
இது உண்மையில் தீமையானது தானா…..அல்லது ஒரு நல்ல வேலை வாய்ப்பை நாம் இழக்கிறோமா என்பதை ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிய வேண்டும் என கூறி…. அதற்காக இந்த பொருட்களால் மண்ணுக்கும், காற்றுக்கும், உயிரினத்துக்கும், சூழலுக்கும் என்னவெல்லாம் நேர்கிறது என்பதை முறையாய் ஆராய்ந்து சொல்லும்படி பயோஸியை பணித்திருக்கிறது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
பயோசி கொடுக்கும் ரிப்போர்ட்டின் மூலம் இந்த தொழில் இங்கு தொடருமா இல்லை நிறுத்தப்படுமா என்பது நிலை……
இப்படி ஆய்வறிக்கை மட்டும் இது தீங்கான தொழில் என உறுதி செய்துவிட்டால் தங்கள் தொழில் முற்றிலுமாக அழிந்துவிடும் என்று உணர்ந்த NM என்ற நிறுவனம்----
பல நாட்டு கழிவுகளை இந்தியாவிற்கு வாங்கி அனுப்புவதையே ப்ரதான தொழிலாக கொண்டு வெகு பெரிய அளவில் சம்பாதிக்கும் நிறுவனம் அது…..
வரும் ஆய்வறிக்கை தனக்கு சாதகமாக வர வேண்டும் என்பதற்காக …..வர்ஷன் போன்ற நேர்மையான ஒருவன் பணம் வாங்கிக் கொண்டு பொய்யான அறிக்கை தர ஒப்ப மாட்டான் என உணர்ந்து……இந்த லக்க்ஷணா மூலம் நாடகமாடி வர்ஷனை இப்படி ஏமாற்றி ஒழிய வைத்துவிட்டு….
அவன் இல்லா நேரம்….பயோஸியில் வேலை பார்த்த சிலரை பயன்படுத்தி அந்த அறிக்கையை மற்றி அமைக்க முயன்று கொண்டிருக்கிறது…..அப்படி உள்ளே சிலரை அந்த NM நிறுவனம் விலைக்கு வாங்க உதவியவன் தான் அந்த செத்துப் போன பயஃஸி எம்ளாயி…
அவன் வேலை முடியவும் அவனை கொன்று போட்டிருந்தது அந்த NM நிறுவனம்……ரகசியம் காக்க அது சிறந்த வழியாக பட்டது அதற்கு.
அதோட வர்ஷனுக்கு மயக்க மருந்து கொடுத்து மயங்கிவிழ வைத்து….மீண்டும் அவன் விழிக்கும் போது அவந்தான் இந்த எம்ளாயியை கொன்று விட்டதாக நம்ப வைத்து வர்ஷனை ஓடி ஒழிய வைத்திருந்தது அது.
வர்ஷனுக்கு பயோசியில் நடக்கும் பல ஆராய்ச்சி ரிப்போர்ட்டுகள் அன்று அன்று அனுப்ப பட்டுக் கொண்டிருந்தாலும்…..சில ஆராய்ச்சிகள் பற்றி அவனுக்கு அனுப்ப படவே இல்லை…அதில் ஒன்று இதுவும் என்பதை வைத்து இதை ஓரளவு யூகித்த மித்ரன்…. இறந்து போன அந்த எம்ளாயி பாசுரன் உடலில் இருந்த கடி காயங்கள் அவன் மரணத்திற்கு பின் ஏற்பட்டவை என்ற போஸ்ர்ட் மாட்டம் ரிப்போட்டின் மூலமும்…அவனுக்கும் NM நிறுவன முக்கிய புள்ளிக்கும் இடையில் அவ்வப்போது பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது என கிடைத்த தகவல் மூலமும் மீதியை யூகித்து, லக்க்ஷணாவின் வாக்கு மூலத்தில் இதை உறுதி செய்து கொண்டான்…….
ஆக இப்போது சுப காலம் ஆரம்பம்…….
Friends …...Family partக்கு உங்களில் அநேகர் தனி எபி கேட்டிருப்பதால் அடுத்த எப்பியை குடும்ப எப்பியாக்கி முடிக்கிறேன்…. நன்றி.
தொடரும்!
{kunena_discuss:928}