(Reading time: 25 - 50 minutes)

"ப்படி என்னை பிரிஞ்சு பிருத்வி உன்னோட சந்தோஷமா வாழ்வாருன்னா... அவரை டைவர்ஸ்க்கு அப்ளை பண்ண சொல்லு... நான் கையெழுத்து போட்டு தரேன் போதுமா..??" என்று கூறினாள்.

"ரொம்ப தேங்க்ஸ்... நீ சொல்லிட்டல்ல... சீக்கிரமே பிருத்விக்கிட்ட இருந்து உனக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி வைக்கிறேன் பாரு..." என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.

அவள் போனதும் தேவாவோ... "அவல்லாம் ஒரு ஆளுன்னு அவளுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்க...

பிரணதி எங்கேஜ்மெண்ட்ல இவ பிருத்வி பின்னாடி சுத்தினதையும் பார்த்தேன்... அவன் இவள கண்டுக்காததையும் பார்த்தேன்... கண்டிப்பா பிருத்வி டைவர்ஸ்க்கு சம்மதிக்கவே மாட்டான்... நீ கவலைப்படாத...." என்றான்.

அதுக்கு யுக்தா பதில் சொல்லும் முன்... துணிக்கடை உள்ளே போனவங்களை ஆளைக் காணோமே என்று ஜூஸ் கடையில் இருந்து எட்டிப் பார்த்த சங்கவி... அவர்கள் சப்னாவோடு பேசுவதை கவனித்துவிட்டு அவர்களை நோக்கி வந்தவள்... அருகில் வரும் முன்னரே சப்னா சென்றுவிடவே... "அவக்கிட்ட என்ன பேச்சு தேவா... என்ன சொல்லிட்டுப் போறா அவ..." என்று கேட்டாள்.

யுக்தா பதில் சொல்வதை நிறுத்திவிட்டு... தேவாவிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று ஜாடைக் காட்ட... "அது ஒன்னுமில்ல சங்கு... சும்மா தான் பேசிட்டுப் போறா..." என்றவன்... அவர்களை அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு சென்றான்...

தன்னுடைய ஸ்கூட்டியை சர்வீஸ்க்கு விட்டிருப்பதால் தன்னுடைய தோழி வீட்டிற்குச் சென்று திரும்பிய பிரணதி பஸ்ஸுக்காக காத்திருக்க... சப்னாவோ ஷாப்பிங் முடித்துவிட்டு அந்த பக்கமாக காரில் வந்தாள்... அங்கே பஸ் ஸ்டாப்பில் பிரணதியை பார்த்த அவளுக்கு ஏதோ ஜாக்பாட் அடித்ததுபோல் உணர்ந்தாள்...

இப்போது தான் யுக்தாவை பார்த்தோம்... இங்கோ பிரணதி நின்றுக் கொண்டிருக்கிறாள்.... நம்மக் கிட்ட வசமாக மாட்டினாள்... கொஞ்சம் வெறுப்பேத்தி பார்ப்போம் என்று நினைத்தாள் அவள்...

சப்னாவிற்கு யுக்தாவை விட பிரணதி மேல் தான் மிகவும் வெறுப்பு... பிருத்வியோடு பழகிய ஆரம்ப நாட்களிலேயே பிரணதி இவளை கண்டுக் கொள்ளமாட்டாள்...  எவ்வளவு திமிறு பாரு என்று அப்போதே சப்னா நினைத்துக் கொள்வாள்... பிருத்வியை மணந்து தான் இவள் திமிறை அடக்க வேண்டும்... இப்போது ஏதாவது செய்தால் பிருத்வியை இழக்க நேரிடும் என்ற பயம்... அதுமட்டுமில்லாமல் அவளுக்கு வரூனோடு தொடர்பு இருப்பதை அறிந்ததால்... அதன் மூலமாக இவளையும் பிருத்வியையும் பிரிக்க முயற்சி செய்தால் என்னாவது என்று அமைதியாக இருப்பாள்...

ஆனால் இந்த பிரணதி வரூனின் பழக்கம் காதல் கல்யாணம் வரைக்கும் வரும் என்று இவள் எதிர்பார்க்கவில்லை... இவள் கஷ்டப்பட்டு வரூனிடம் இருந்து பிருத்வியை பிரித்தால்... பிரணதியோ இந்த கல்யாணம் மூலம் திரும்பவும் பிருத்வியோடு வரூனை இணைக்கப் பார்க்கிறாள் என்ற கோபம் வேறு பிரணதி மீது சப்னாவிற்கு இருந்தது....

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

பிரணதி நின்றிருக்கும் இடத்தில் காரை நிறுத்தினால் சப்னா.... அதை பார்த்தும் பார்க்காதது போல் பிரணதி நின்றிருந்தாள்...

"பிரணா என்ன உன்னோட ஸ்கூட்டி என்னாச்சு..  பஸ்க்கு நிக்குற... வா உன்னை நான் ட்ராப் பண்றேன்..." என்று அழைத்தாள்.

உன்னோட உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ்... எனக்கு பஸ்ஸில் போறது ஒன்னும் பிரச்சனையில்ல.... அதனால நீ போகலாம்..." என்று பிரணதி அவள் உதவியை தட்டிக் கழித்தாள்.

"என்ன பிரணா... இந்த பஸ் ஸ்டாப் காலியா இருக்கு... இங்க எல்லா பஸ்ஸும் நிக்காது போல... இது உனக்கு சேஃப்டி இல்ல... அதனால என் கூடவே வா..." என்று அழைத்தாள்.

"உனக்கு சொன்னாப் புரியாதா...?? என்னோட வீட்ல என்னை ட்ராப் பண்ற என்ற பேர்ல... உன் கால் எங்க தெரு பக்கம் கூட பட்றத நான் விரும்பல..." என்று பிரணதி கோபப்படதும்...

"என்னது உங்க தெருவில் என்னோட கால் படக் கூடாதா..?? இன்னும் கொஞ்ச நாளில் நான் பிருத்விக்கு பொண்டாட்டியா உங்க வீட்டுக்கு வருவேனே... அப்போ என்ன செய்வ..." என்றாள் சப்னா.

"நினைப்பு தான் பொழப்ப கெடுத்ததாம்... நீ கனவிலேயே சுத்தறப் போல..." என்று பிரணதி கிண்டலாக பேசியதும்....

"நான் சொன்னது உண்மை தான் பிரணதி... இப்போ தான் நான் யுக்தாவை பார்த்துட்டு வரேன்... அவ பிருத்வியை டைவர்ஸ் பண்ணப் போறாளாம்... அப்புறம் பிருத்வி கண்டிப்பா என்ன கல்யாணம் செஞ்சுப்பாரு... நான் தான் உன்னோட அண்ணியா வரப் போறேன்... நீ அந்த நாளுக்காக காத்துக்கிட்டு இரு..." என்றதும்..

"நீ சொன்னது கனவுல கூட நடக்காது... என்னோட அண்ணனும் அண்ணியும் ஒரு போதும் டைவர்ஸ் பண்ணமாட்டாங்க..." என்று பிரணதி உறுதியாக கூறினாள்.

"நான் சொன்னதில் நம்பிக்கை இல்லைன்னா... யுக்தா கிட்ட கேளு..." என்று சப்னா சொன்னதும்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.