பளிச்சென்று இருந்த அந்த பாத்திரத்தில் தெரிந்த முகத்தை ஆராய்ந்தாள் நந்திதா....
“ஓ....! இது பிம்பிள்....” என்று அவள் சொல்லிக் கொண்டிருந்த நேரம் வீட்டின் வரவேற்பறையில் அரவம் கேட்டது.
ஆர்வத்துடன் எட்டி பார்த்த ப்ரியா, நந்திதாவிடம்
“உங்க பிரென்ட் துளசி வந்திருக்காங்க....” என்றாள்.
“துளசியா....!” என்ற நந்திதாவின் குரலில் மட்டும் இல்லாமல் மனதிலும் சந்தோஷ சாரல் அடித்தது...
ஆனால் கைகள் மூக்கு நுனியை தடவ, அங்கே இருந்த பரு கை பட்டு வலித்தது... கூடவே,
‘ஹைய்யோ... இன்னைக்கு தானா இந்த பொண்ணு வரணும்.... இந்த மூக்கை வச்சே கேலி செய்து உயிரை எடுத்திருவாளே....!’ என்ற கேள்வியும் தோன்றியது.
அதற்குள் வீட்டினுள் துளசி மற்றும் காமா
...
This story is now available on Chillzee KiMo.
...
னா... சாஹித்யாக்கு பால் கொடுக்கலாம்ல துளசி....” என்றுக் கேட்டு பேச்சை மாற்றினாள்.
“ம்ம்ம்... கொடுக்கலாமே....” என்ற துளசி, ப்ரியாவிடம்,
“என்ன இரண்டு பேரும் நாங்க வரும் போது பயங்கரமா சிரிச்சு பேசிட்டு இருந்தீங்க... நாங்க வந்த உடனே நிறுத்திட்டீங்க.... என்ன விஷயம்?” எனக் கேட்டாள்.