நந்திதா பக்கம் பார்த்த ப்ரியா சின்ன சிரிப்புடன்,
“ஒரு பெரிய மர்மம் பத்தி பேசிட்டு இருந்தோம்....” என்றாள்.
‘மர்மமா? அப்படி என்ன மர்மம்?”
“அது மூக்கு பற்றிய மர்மம்....” என ப்ரியா பேசிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட நந்திதா,
“போதும் போதும்.... அந்த பேச்சு வேண்டாம்... அர்ச்சனா நீ போய் ஜூஸும் பாலும் ரெடி செய்து தாயேன்...” என்றாள்.
“இதோ போறேன் அக்கா....” என்ற படி அர்ச்சனா அங்கிருந்து சென்றாள்.
நந்திதாவை கேள்வியாக பார்த்த துளசி,
“என்னடி விஷயம்? எதையோ என் கிட்ட இருந்து மறைக்குற போல இருக்கே....” என்றாள்.
“ஆமாம் ரொம்ப முக்கியமான விஷயம்.. அதை வேற மறைக்குறேன்... நீ வேற...”
“ஹ்ம்ம்... நீ இப்படி சொன்னா
...
This story is now available on Chillzee KiMo.
...
தோன்றி இருந்தது....
துளசிக்கு அவர்கள் இருவரின் காதல் நாடகத்தை வேடிக்கை பார்ப்பது சுவாரசியமாக இருந்தது.
“அதெல்லாம் எங்க ரகசியம் உதய்... சொல்ல முடியாது....! ஆனாலும் பத்து மணிக்கு ஆபிஸ் போய் ஒரு மணிக்கு திரும்ப வந்து நிற்கும் உன்னுடைய கடமை உணர்ச்சி என்னை உச்சி குளிர வைக்குது....”