"நீ செய்தது தப்பில்லை!ரொம்ப சரி தான்!ஆனா,அந்தப் பொண்ணு வாழ்க்கையை மனசுல வைத்துக்கோ!புரியுதா?"
"சரிண்ணா!"
"உங்க இரண்டுப் பேருக்கும் நடுவுல வேற எதாவது ரிலேஷன்??"
"இல்லைண்ணா!அதெல்லாம் இல்லை!"-ஜோசப் அவனை உற்று பார்த்தான்.
"சரி நீ கிளம்பு!"-எட்வர்ட் அமைதியாக எழுந்து கிளம்பினான்.அவன் கிளம்பியதும்,மெதுவாக எழுந்து ஜன்னலிடம் சென்று நின்றவனிடமிருந்து பெருமூச்சு உருவானது.
"ம்...ட்ரை பண்றேன் மேடம்!"
"இல்லைம்மா!நீ கண்டிப்பா வரணும்!எனக்கு புரியுது நீ பெரிய கலெக்டர்!முக்கியமான வேலை நிறையவே இருக்கும்.எங்களுக்காக வாம்மா!"
"ஓ.கே மேடம்!நான் கண்டிப்பா வரேன்!"-ஒரு வழியாய் சம்மதித்துவிட்டாள் நிர்பயா.
"என்ன ஹனி?என்னாச்சு?"
"நான் படித்த ஸ்கூல்ல ஒரு சின்ன கெட் டூ கெதர் தாத்தா!பிரின்சிபால் நானும் வரணும்னு கேட்கிறாங்க!"
"போயிட்டு வா செல்லம்!உன்னை வளர்த்துவிட்ட இடம் ஆச்சே அது!சரி..என்னிக்கு பங்ஷன்??"
"2 நாள்ல!"
"ஜாக்கிரதையா போயிட்டு வா!சரியா?"
"ம்...சரி!நான் கிளம்புறேன்!"-என்றவள் கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
அவள் கிளம்பியதும் ஏதோ சிந்தனை செய்தவர் தானறியாமல் வாய்விட்டு உரைத்தார்,"ஸ்கூல் பங்ஷனா?"என்று!!!!
பூஜை அறையில் அமர்ந்திருந்த சமயத்திலும்,பல்லவியின் சிந்தனை இறைவனை அடையவில்லை.
"கேட்கலை...மறுபடியும் சொல்லுங்க!"-நிர்பயாவின் குரலே செவிகளில் ரீங்காரமிட்டது.
அவள் எவ்வளவு மாறிவிட்டாள்??என் நிர்பயாவா அவள்??ஒருவரது உணர்வுகளை உதாசீனம் செய்ய யார் கற்று தந்தார் அவளுக்கு??அதற்கு காரணம் நானா??அவர்கள் கண்கள் கலங்கின...
அவரது நினைவுகள் மகளின் கடந்தக் காலத்தை எண்ணின.
அன்றொரு நாள்...!
"மா!நான் என் ஸ்கூல்ல முதல்முறையா ஒரு பங்ஷனை இன்னாக்ரேட் பண்ண போறேன்மா!"-மகிழ்ச்சியோடு கூறிய புதல்வியை உச்சி முகர்ந்து முத்தமிட்டார் பல்லவி.
"ம்..எவ்வளவு பெரிய பொறுப்பு!!ஒழுங்கா,சிரத்தையோட செய்யணும்.சரியா??"
"ம்...சரிம்மா!"
"ஒழுங்கா படிப்புல கவனம் செலுத்தாம,இன்னாக்ரேட் பண்ணுறாளாமே!"-அவளை தூற்றும் தன் கடமையை நிறைவேற்ற வருகை தந்தார் லட்சுமி.
நிர்பயாவின் முகம் வாடியது!!
"இவ எல்லாம் எங்கே படிக்க போறா?பங்ஷன் அது இதுன்னு கூத்தடிக்கிறதுக்கு தான் பிரயோஜம்!"-அவளை எள்ளி நகையாடிய சமயம்,ஸ்வேதாவின் முகத்தில் ஆயிரம் மின்னொளிகள்.
"பல்லவி!"-விசாலாட்சியின் குரலில் கலைந்தார் அவர்.
"அத்தை??"
"என்ன கண்ணு கலங்கி இருக்கு?"
"ஒ..ஒண்ணுமில்லை அத்தை!"
"நிர்பயாவை நினைத்து கவலையா?"
"................."
"எதுக்கு வருத்தப்படுற??அன்னிக்கு மற்றவங்க எல்லாரும் அவளை அவமதித்த போது,அவ அமைதியா இருந்தா!இன்னிக்கு,அத்தனை பேரும் நடுங்குற குரலில் அவ அமைதி பேசிட்டு இருக்கு!கவலைப்படாதே!எல்லாம் சீக்கிரமே சரியாகும்!"-ஆறுதல் கூறி தேற்றினார் விசாலாட்சி.
சில நேரங்களில் இதுபோன்ற ஆறுதல்கள் தான் நம்பிக்கை என்ற தீபத்தை நம்முள் ஏற்றி வைக்கிறது அல்லவா!!!
தொடரும்
{kunena_discuss:1030}