(Reading time: 10 - 19 minutes)

வர்கள் கிளம்பவும், சுபத்ரா மேலும் கொஞ்ச நேரம் தன் அம்மாவிடமும் , அப்பாவிடமும் கொஞ்சி பேசி விட்டு .. தன் நண்பர்களிடமும் வம்பிழுத்துவிட்டு கிளம்பினாள்..

கிளம்பும்போது சுபத்ராவின் பெற்றோர் ரூம் vacate செய்யும் formalitiesக்காக இருக்க, அவர்களுக்காக வெயிட் செய்த படி இளையவர்கள் நால்வரும் பேசிக் கொண்டிருந்தனர்..

“ஹேய். .சுறா.. கொஞ்சம் ஜாக்கிரதையா இருடா.. ரொம்ப வம்பு பண்ணாத.. “ என்றான் வருண்..

“என்னடா.. இன்னும் நீ அதையே நினைசுகிட்டு இருக்கே.. அவங்க தப்பா எல்லாம் எடுத்துக்கலை.. நானும் மோசமா எல்லாம் பேசலை.. நீ வொர்ரி பண்ணிக்காத.. “ என்று தைர்யம் சொன்னாள்..

எல்லோரும் அவரவர் இடத்திற்கு கிளம்பினர்.. போகும்போது சுபத்ரா பெற்றோர் அறியாமல், மகிமா

“டேய். .சோடா.. எனக்கு கொஞ்சம் நம்ம சுறா மேலே டவுட் வருதுடா.. “

“என்ன டவுட்.. “

“இல்லை.. சுறா எல்லாருக்கும் பேர் வைப்பா.. ஆனால் ஒரே ஆளுக்கு இதனை பேர் வைக்க மாட்டாளே.. அதோட.. எல்லாமே ஒரு மாதிரி அந்த கேப்டன் உசத்தி தான் பேர் வச்சிருக்கா.. “

வருண் அவள் முகத்தை பார்க்க “ஆமாம்.. அதோட.. ராகுல் பத்தி அவ எதுவும் சொல்லல.. ஆனால் அர்ஜுன் பத்தி மட்டும் அடிக்கடி அவர் அப்படி எல்லாம் இல்லை அப்படினு சொல்றா.. சோ அவளுக்கு எங்கியோ பல்பு எரிய ஆரம்பிசுருச்சோ.. “ என,

“நீ சும்மா இரு... நானே அதுதான் யோசனைலே இருக்கேன்.. ஏற்கனவே.. கிருஷ்ணப்பா.. ருக்கும்மா ரெண்டு பேரும் ரொம்ப வருத்தப்படறாங்க.. இதுலே வர்ற மறுமகனும் ஆர்மியா இருந்தால் அவங்களுக்கு எப்படி இருக்கும்.. ? “

“ஹ்ம்ம்.. இப்போ என்ன செய்யுறது ? சுபாகிட்ட சொல்லிட்டா.. அவ கொஞ்சம் சுதாரிப்பா இருப்பாளே..?”

“இல்லை.. இப்போ அவ மனசிலே வேற எந்த எண்ணமும் இல்லை.. அர்ஜுன் மேல் ஒரு ஹீரோ வொர்ஷிப் மாதிரிதான் இருக்கு .. நாம இப்படின்னு சொன்னோம்னா.. அதுவே அவ மனசை அவர்கிட்ட கொண்டு போனாலும் போகலாம்.. “

“வேற என்னதான் செய்யுறது.. ? “

“கொஞ்ச நாள் வெயிட் பண்ணலாம்.. அதுக்கு நடுவில் நான் மிதுன் கார்டு வாங்கி வச்சு இருக்கேன்.. அவர் மூலமா விசாரிக்கிறேன்.. “

“ஹேய்.. என்னடா விசாரிப்பே.. ? அவர்தான் அவங்க அப்பா வரைக்கும் சொல்லிட்டார் லே.. ?”

“லூசு.. அர்ஜுன் மனசிலே இருக்கிறத பத்தி கேட்டு பார்கிறேன்னு சொன்னேன்.. “

“ஒஹ் .. “ என்றா.ள் மகிமா..

அர்ஜுன் , ராகுல், மிதுன் மூவரும் தனியாக செல்லும் போது, மிதுன் ஓங்கி அர்ஜுன் முதுகில் அறைந்தான்..

“என்னடா.. எரும.. ? எதுக்கு இப்படி அடிக்கிற.?”

“போடா.. எரும.. இத்தனை நாளா ஏண்டா சுபத்ரா இங்கே இருக்கிறதா பத்தி சொல்லல.. ?”

“ அதுக்கு என்ன இப்போ?”

“டேய்.. இத்தனை நாள்லே அவள் கிட்ட பேசி மகிமாவ பத்தி கேட்டு எனக்கு சொல்லிருக்கலாம் லே.. நான் அவள பார்க்க எத்தனை வருஷமா காத்துட்டு இருக்கேன்னு உனக்கு தெரியாதா..?”

“நீ மட்டும் தான் மகிமாவுக்காக காத்துட்டு இருந்தியா? நானும் சுபாவிற்கு காத்து இருந்தேன் இல்லை.. ? ‘

‘அதுதான் நானும் சொல்றேன்.. அவ இங்கே சேர்ந்து ஆறு மாசம் இருக்கும்.. நீ எங்கிட்ட சொன்னியா?”

‘நீ மட்டும் அன்னிக்கு இவங்கள ரயில்வே ஸ்டேஷன் லே பார்த்தேன்னு பெருமை பட்டுக்கல.. அதோட அவங்கள follow பண்ண முடியலையான்னு கேட்டதுக்கு என்ன சொன்ன.. ? என்னமோ நான் இங்கே உட்கார்ந்து இருந்தா என்ன பண்ண முடியும்னு கேட்டல்ல.. இப்போ என் சுபாவே.. இங்கே வந்துட்டா..  மகிமாவ கண்டு பிடிக்க உன்னாலே என்ன பண்ண முடிஞ்சுது.. ?”

இவர்கள் இருவரின் சண்டைய பார்த்த ராகுல், ரெண்டு பேர் மண்டையும் தட்டி

“டேய் .. என்னங்கடா நடக்குது இங்கே.. ? ஒழுங்க சொல்லிடுங்க.. “ என்று கத்தினான்..

அவர்கள் இருவரும் அலட்டாமல்

“எது உனக்கு நடந்ததோ .. அதுவே எங்களுக்கும் நடந்தது.. “ என்று கீதையின் பாணியில் சொல்ல,

அவர்கள் இருவரையும் துரத்தினான் ராகுல்..

மழை பொழியும்

Episode 08

Episode 10

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.