(Reading time: 6 - 11 minutes)

கார்த்தி…. அக்கா கூடவே இருங்க… எங்கேயும் போயிடாதீங்க….”

அர்னவிடம் சரயூ போனை கொடுத்துவிட்டு சென்றதும், ஜானவி அவனிடம் பேச, அவன் அமைதியாக இருந்தான்…

“கார்த்தி… இருக்குறீங்களா?...”

“இருக்கேன்…” என்றவனின் குரலே காட்டமாக இருந்தது… அதை அவளாலும் உணர முடிந்தது நன்றாகவே…

“அம்மாவும் அப்பாவும் வர நேரமாகுமா?...”

“தெரியலை… கல்யாணம் முடிஞ்சதும் கிளம்புவாங்க…”

“சரி அம்மா அப்பா வந்ததும், கோபமா பேசாம பொறுமையா பேசுங்க… ப்ளீஸ்…”

“………..”

“அக்காவ வற்புறுத்தின்னாலும் சாப்பிட வைங்க…”

“சரி…” என்றவன், “நான் அப்புறம் பேசுறேன்…” என போனை வைக்க முயல,

“சரி….” என்றவளுக்கும் அவன் மனது புரிய, போனை வைக்கும் முன்னர்,

“சாப்பிடாம இருக்காதீங்க கார்த்தி… சாப்பிடுங்க… அக்கா கூட சேர்ந்து… ப்ளீஸ்…” என்றவள் அவன் அமைதியாகவே இருக்க,

“கார்த்தி……..” என்றாள்…

“ம்ம்……”

“சரி ஆகிடும் கார்த்தி எல்லாம்…”

அவன் எதுவும் பேசாமல் இருக்கவே,

“அக்காவப் பார்த்துக்கோங்க… நான் அப்புறம் கூப்பிடுறேன்….” என சொல்லிவிட்டு வைக்க போனவள்,

“யூ டூ டேக் கேர் கார்த்தி….” என கூறிவிட்டு கனத்த இதயத்துடன் போனை வைத்தாள்…

ல்யாணத்திற்குச் சென்றுவிட்டு திரும்பிய தாயிடமும், தகப்பனிடமும் அர்னவ், சரயூவின் கணவன் அவளை வீட்டை விட்டு அனுப்பியதைப் பற்றி சொல்ல, அவர்களும் தங்கள் மகளை எண்ணி வேதனையில் துடித்தனர்…

கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய சண்முகமோ, மருமகளைக் காணாது எங்கே என கேட்க, அவரிடம் சுதீப், சரயூவை திலீப் நடுராத்தியில் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டான் என்று கூற, அவரோ திலீப்பை கோபமாக திட்டினார்…

அவன் எதற்கும் மசியாமல் இருக்கவே, பூஜாவும், பிரேமியும் சரயூவைக் காணாது அழ ஆரம்பிக்க, அவன் அப்போதும் எதுவும் பேசவில்லை… சரயூவின் தந்தை போன் செய்த போதும் எடுத்து பேசிடவில்லை…

சண்முகத்திடம் பேசிய சரயூவின் தந்தைக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் துடித்தார் சண்முகம்…

கடைசியில், பேத்திகளை அழைத்துக்கொண்டு சரயூவைப் பார்க்க கிளம்பினார்…

மதியமே அடித்துப் பிடித்து சம்பந்தி வீட்டிற்கு வந்து சேர்ந்தார் சண்முகம், சுதீப் மற்றும் குழந்தைகளுடன்…

பெரியவர்கள் மாறி மாறி திலீப்பினை சமாதானம் செய்து சரயூவை அவனுடன் வாழ வைக்க முனைய, அர்னவோ பல்லைக் கடித்தான்…

ந்த ஒருநாள் எப்படி போனது என்றே தெரியாமல் நகர, சரயூ மட்டும் பித்து பிடித்தவள் போலே இருந்தாள்…

இரவு பத்து மணி தாண்டிய நிலையில், ஜானு அர்னவிற்கு போன் செய்தாள்…

“அக்கா எப்படி இருக்குறாங்க கார்த்தி?... ஏன் போனே எடுக்கலை?... பயந்துட்டேன்…”

“வெளியே இருக்குறேன்…”

“புரியலை… இந்நேரத்துல???....” என அவள் இழுக்க,

“பஸ்ல இருக்குறேன்… ஊருக்கு வந்துட்டிருக்கேன்….”

“கார்த்தி என்ன சொல்லுறீங்க?...”

“சிஸ் ஊருக்குப் போயி, செய்ய வேண்டியதை செஞ்சிட்டு வரேன்…”

அவனின் பதிலில் “என்ன…..” என சத்தமாகவே சொன்னாள் ஜானவி…

“எதுக்கு கார்த்தி இப்படி செய்தீங்க?... இருக்குற பிரச்சினை போதாதா?...”

அவள் சற்று கோபமாகவே கேட்க

“பிரச்சினையை முடிக்கத்தான் போனேன்…” என்றான் அவனும்…

தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.