(Reading time: 12 - 23 minutes)

"தை பத்தி எனக்கு கவலை இல்லை"

'ஆமாம் உன் பேரு என்ன?"

"சொல்ல முடியாது!!"

"இப்பவும் சொல்ல மாட்டியா? நானே கண்டுபிடிக்கறேன்"

"பாக்கலாம், உங்க பேரு?"

"அதை தான் அன்னைக்கே சொன்னேனே?"

"இல்லையே?"

"உன்கிட்ட கொடுத்தேன் விசிட்டிங் கார்ட் அதுல பாக்கலையா, போய் பாரு"

அதை கையில் வைத்து கொண்டு அத்தனை நாள் யோசித்தும் அவன் பேரை கூட பார்க்காமல் விட்ட தன் முட்டாள் தனத்தை நினைத்து மான்சீகம் கொட்டி கொண்டாள்.

"ம்ம்ம் பரவாயில்லை நீங்களே சொல்லுங்க"

"முடியாது" இப்போது அவன் திமிராக சொல்ல, சுள்ளென கோபம் வந்தது இவளுக்கு.

"முடியாதுன்னு போ" என்று விட்டு இவள் மீண்டும் தேட,

"என்ன தேடுற இதையா?" என்று தன் சட்டை பையில் இருந்து அவள் ஜிமிக்கியை எடுத்து காண்பித்தான்.

"இது எப்படி உங்கிட்ட?"

"அப்போ உனக்கு எதுவுமே தெரியலையா?"

"என்னது?"

"நீ இங்க ஊஞ்சல்ல தூங்கும் போது நான் பண்ணின எதுவுமே?!"

"எ என்ன பண்ணின?" என்று ஒரு வித பயத்தோடு அவள் கேட்க, அவள் அருகில் வந்தவன் சொன்னான்.

"கூல்.. இந்த கம்மலை போட்டுக்கிட்டு கஷ்டப்பட்ட அதான் கழட்டினேன்.. வேற ஒன்னும் பண்ணலை அவ்வளவு கெட்டவன் இல்லை நான்.!! என் கார்டை உன்கிட்ட கொடுத்ததும் நீ என்னை கூப்பிடலை.. ஆனாலும் பார்த்தியா மறுபடியும் நம்ம சந்திக்கிற மாதிரி ஆகிடுச்சு"

"..........."

"இப்போ நான் போகணும், இந்த தடவை என்னை பத்தி எதுவும் நான் சொல்ல போறதில்லை.. உன்ன பதியும் கேட்க போறதில்லை விதி முடிவு பண்ணட்டும் மறுபடியும் சந்திக்கலாம்.. இந்தா..." அவள் கைகளில் ஜிமிக்கியை வைத்தவன் அவளை கடந்து போனான். மீண்டும் திரும்பிவந்தவன் அவள் காதோரம்

"உனக்காக மறுபடியும் வருவேன்.. எப்போ வேணாலும்.. எங்கே நீ போனாலும்.. கண்டிப்பா வருவேன்" என்று கூறி விட்டு சென்றான்.

அவன் மூச்சு காற்று கன்னத்தை உரசி போக ஒரு வித சிலிர்ப்புடன் அவன் போனபின்பும் அங்கேயே நின்றிருந்தாள் நித்திலா!!

 

உயிர் தேடல் தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1037}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.