(Reading time: 27 - 54 minutes)

தற்கு என்ன இவன் லூசு மாதிரி பேசுகிறான் என்று அவனை வித்தியாசமான பிறவியை பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டு சென்று கதவின் லாக்கை கையில் பிடித்து திருகி திறக்க முயன்றால் ஆனால் அக்கதவை அவளால் திறக்க முடியவில்லை.

அவள் திரும்ப திறக்க முயர்ச்சிசெய்யும் போது அவள் பின்னால் நெருங்கி நின்று அவள் கையின் மேல் தன் கையை வைத்து லாக்கில் இருந்த அவள்கையை எடுத்து தடவியவாறு நான் கை வைத்தால் மட்டும் தான் அது திறக்கும் பேபி என்று அவள் காதோரம் கூறினான்.

அவன் தன் பின்னால் நெருங்கி நின்றதுமே தன்னை சுதாரித்துக் கொண்டவள் அவன் தன் கைமேல் கையை வைக்கவும் அவன் கையை உதற முயன்றாள்.

ஆனால் பார்பதற்கு சாதாரணமாக பிடித்திருப்பதை போன்று இருக்கும் அவன் பிடி உண்மையில் ரொம்ப இறுக்கமாக இருந்தது அவளாள் தன் கையை உதற முயற்சிசெய்ய மட்டும் தான் முடிந்தது.

பின் அவளின் பின்னால் இருந்துகொண்டு தன் உதடுகள் அவளின் காதினருகில் கொண்டுசென்று பட்டும்படாமலும் நான் கை வைத்தால் மட்டும் தான் அது திறக்கும் பேபி என்று கூறி அவளின் தோளின் மேல் தன் கையை வைத்து சற்று அவளை தள்ளி நிறுத்தி கதவை திறந்து வைத்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

மஹிந்தனின் அச்செயலால் கோபம் கொண்டு உதடுகள் நடுங்க கண்களால் உக்கிரமாக பார்த்தவண்ணம் எது சொல்வதென்றாலும் என்னை தொடாமல் பேசுங்கள் என்று குறைந்த ஒளியில் கர்ஜனை செய்தாள்.

அதற்கு மஹிந்தன் சிரித்துக்கொண்டே சத்தம் வராமல் உதடு மட்டும் அசைத்து போடீ! என்று கூறி வாசலை காண்பித்தான்.

மேலும் அங்கு நின்று அவனை பார்க்க பிடிக்காமல் கோபத்துடன் வெளியே வந்தவள், உமாவின் கவி என்ற அழைப்பதை கேட்டவள் அதே கோபத்துடன் திரும்பி பார்த்தாள்.

அவள் கோபமாக பார்ப்பதை பார்த்த உமா நான் என்ன செய்தேன் என்று என்னை முறைக்கிறாய் கவி என்று கேட்டாள்.

அவள் அவ்வாறு கேட்டதும் தன் கோபத்தை மறைத்து அச்சோ எனக்கு உங்கள் மேல் கோபம் எதுவும் இல்லை என்று கூறினாள் கவிழையா.

என் மேல் கோபம் இல்லையெனில் பின் யார் மீது கோபம் என்று கேட்டு மஹிந்தனின் மூடிய அறைகதவை திரும்பி பார்த்துவிட்டு நம் பாஸ் மீது தான் கோபமா? என்று கேட்டாள் உமா.

அதற்கு கவிழையா நான் இப்பொழுது ஹ்ட்டல் சோழாவிற்கு கிளம்ப வேண்டும் இன்னொரு நாள் உங்களிடம் பேசுகிறேன் என்று எடுதுவைக்கவேண்டிய பைல்களை எடுத்து சரிபர்த்து முடிப்பதற்குள் மஹிந்தன் வெளியே வந்து ழையா வா போகலாம் என்று கூறி முன்னாள் நடந்தான் அவளும் பைல்களுடன் பின்னால் சென்றாள்.

உமா அன்று மதியம் லஞ்ச் சாப்பிடும் போது அஜயின் நண்பன் உமாவிடம் என்ன நீங்கள் தனியாக சாப்பிட வந்திருக்கீர்கள் எம். டீ யின் நியூ செக்ரட்டரி என்றதில் அழுத்தம் கொடுத்து உங்களுடன் சாப்பிட வரவில்லையா என்று கேட்டான். அதற்கு உமா இன்று நான்கு மணிக்கு ஹோட்டல் சோழாவில் ஒரு முக்கியமான் கிளைண்டை மீட் பண்ண தேவையானவற்றை எம். டீ உடன் டிஸ்கஸ் செய்வதால் அவள் என்னுடன் சாப்பிட வரவில்லை எம்.டீ உடன் இருக்கிறாள் என்றாள். அவனுக்கு தேவையான தகவலை பெற்றதும் அப்படியா? என்று கூறிக்கொண்டு அந்த விசயத்தை அஜயிடம் தெருவிக்க அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான்.

அஜய்க்கு அந்த விஷயம் தெரிந்தவுடன் ஐஸ்வர்யாவை ஹோட்டல் சோழாவிற்கு வரச்சொன்னான். அங்கு சாயந்திரம் தன்னுடைய நண்பன் பார்ட்டி கொடுப்பதில் கலந்து கொள்ள அழைத்தான்.

பார்ட்டி ஹாலின் வாசலில் நின்றுகொண்டிருந்த அஜய் ஐஸ்வர்யாவின் இடையில் கைகொடுத்து நெருங்கி நின்று கொண்டிருந்தான் அப்பொழுது கவிழையாவுடன் மஹிந்தன் நுழைவதைப் பார்த்தவன் ஐஸ்வர்யா உன்னுடைய பியான்ஸ் வேறு ஒரு பெண்னுடன் அங்கே போகிறார் பார்! என்று சொன்னான்.

ஐஸ்வர்யா பார்க்கும் போது மஹிந்தன் தன் தொலைபேசியில் பேசிக்கொண்டு வந்தான் அவனுடன் வந்த கவிழையாவை [அஜய் ஏற்பாடு செய்திருந்த ] ஒருவன் தன்னுடன் வந்தவர்களிடம் கவிழையாவைப் பார்த்து எதோ சொல்லிக்கொண்டு அவளை நோக்கி இடிப்பதைப்போல் நெறுங்கிவந்தான் தற்செயலாக கவனித்த் கவிழையா அவசரமாக விலகி தடுமாறி விழப்போனவளை மஹிந்தன் தாங்கி தன்னுடன் பிடித்துக்கொண்டு ஒரு காலால் இடிக்கவந்தவனை உதைத்துதள்ளி கோபமாக ஒரு விரலை நீட்டி யாரிடம் உன் வேலையை காண்பிக்கிறாய்? என்று கடுமையாக எச்சரித்தான்.

விழுந்தவன் எழுந்து நிற்பதற்குள் அங்கே நான்கு பேருடன் விரைந்து வந்த கதிர் சட்டை காலரை பின்னிருந்து பிடித்து தூக்கியவன் மஹிந்தனை பார்த்து நான் இவனை நம் இடத்திற்கு போய் விசாரிக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினான் தன்னுடன் வந்தவர்களிடம் அவனை ஒப்படைத்துவிட்டு மற்ற இருவருடன் கவிழையா, மகிந்தனுக்கு பாதுகாப்புடன் உள்ளே கூட்டிச்செல்லும் பணியை மேற்கொள்ள முயன்றான்.

மஹிந்தன் தன்னை விழாமல் பிடித்ததும் அவனிடம் இருந்து விலக முயன்ற கவிழையாவை முறைத்த மஹிந்தன் கோபமாக தன் வாயில் ஒரு விரல் வைத்து இஸ்.... என்று சத்தம் கொடுத்து அடக்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.