Chillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில - நாவல் போட்டி
தருணம்
வெற்றி பெற்றவர்களின் பட்டியலுக்கு போகும் முன், உலகெங்கிலும் கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய ஒவ்வொருவரையும் பாராட்ட சிறிது நேரம் ஒதுக்குவோம். இந்த தொற்றுநோய் நம் வாழ்க்கையை மாற்றிவிட்டது. கிட்டத்தட்ட நாம் அனைவருமே இந்த தொற்றுநோயால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டுள்ளோம். ஆனால், இது வாழ்க்கையின் அடிப்படைகளுக்கு நாம் மீண்டும் செல்லவும் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. அதாவது வாழ்க்கையை வாழ, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற, மேம்பட்ட குடும்ப நேரம் என நம்மை நல்ல விதத்தில் மாற்றவும் செய்திருக்கிறது. அப்படியே விரைவில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று நம்புவோம்.
நன்றி
போட்டி நீதிபதிகள், குழு உறுப்பினர்கள், போட்டி எழுத்தாளர்கள் மற்றும் வாசிப்பு சந்தாதாரர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றியாளர்கள்
திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில - நாவல் போட்டி வெற்றிப் பெற்றவர்கள்:
First prize - ₹ 25,000 * 2 = ₹ 50,000*
Second prize - ₹ 15,000 * 2 = ₹ 30,000*
Third prize - ₹ 10,000 * 2 = ₹ 20,000*
Special prize - Honorable mentions
இந்த கூடுதல் பரிசுகளுக்கு நிதியுதவி வழங்கிய Chillzee.in மேனேஜ்மென்ட் மற்றும் குழுவுக்கு எங்களின் (நானும், Chillzee KiMo குழுவும்) பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!
Special prize - ₹ 7,000 * 4 = ₹ 28,000*
* Face value of cash prizes
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், வெற்றிப் பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுகளையும், நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
போட்டியின் இறுதி வார்த்தைகள்
இந்த போட்டி எங்கள் KiMo குழுவின் முதல் பெரிய நிகழ்வாகும். எல்லோரும் ஆர்வத்துடன் பங்கேற்பதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது. இந்த போட்டியை இப்படி ஒரு மகிழ்ச்சி கலந்த நல்ல விதத்தில் முடிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த நேரத்தில் நம் எழுத்தாளர்களின் நலனுக்காக போட்டி நீதிபதிகள் (வாசகர்கள்) பகிர்ந்துக் கொண்ட சில அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:
- எழுத்துப்பிழை தவறுகள் மற்றும் இலக்கண தவறுகள் நாவல் பற்றிய நல்லதொரு உணர்வை கொடுப்பதில்லை.
- சில நாவல்கள் சிறந்த கதையைக் கொண்டிருந்தன, ஆனால் எழுதும் பாணி அதே சிறப்புடன் இல்லை.
- கதையுடன் ஒன்ற வைக்கும் கதை ஓட்டம் அவசியம்.
- சில நாவல்கள் சுவாரஸ்யமான தொடக்கத்தைக் கொண்டிருந்தன. ஆனால் சாதாரணமான நடுப் பக்கங்கள் அவற்றுக்கு உதவவில்லை.
- > 30,000 சொற்களைக் கொண்ட ஒரு நாவல் கையில் இருக்கும்போது, அந்த நாவல் வாசகரின் ஆர்வத்தை கடைசி பக்கம் வரை தக்க வைப்பது முக்கியம்.
- வித்தியாசமான கரு என்றாலும் வழக்கமான ஒன்று என்றாலும், வாசிக்கும் வாசகரை அது சென்று சேருவது முக்கியம்
இந்த அறிவிப்பை நிறைவு செய்யும் முன் ஒரு விஷயத்தை பகிர விரும்புகிறேன்.
நீங்கள் புதிய எழுத்தாளராக இருந்து உங்கள் எழுத்துத் திறனை வெளிப்படுத்த சிறந்த அடித்தளத்தை தேடுகிறீர்களானால், Chillzee.in ஐ தேர்ந்தெடுங்கள். Chillzee.in உங்கள் எழுதும் ஆசையை தொடங்க உதவுவது மட்டுமல்லாமல், உங்களை வாசகர்கள் வட்டத்துடன் இணைக்கவும் உதவுகிறது. மற்றும் எங்கள் தமிழ்-ஆங்கில நாவல் போட்டியைப் போன்ற எதிர்கால போட்டிகளுக்கு உங்களை வடிவமைக்கவும் உதவுகிறது. இங்கே க்ளிக் செய்து Chillzee.in'ன் தற்போதைய மற்றும் கடந்தகால எழுத்தாளர்களின் பட்டியலைப் பாருங்கள் - https://www.chillzee.in/stories/chillzee-completed-stories-by-authors-01.
Chillzee KiMo வில் இருக்கும் அருமையான நாவல்களையும் படிக்கத் தவறாதீர்கள் - https://www.kimo.chillzee.in/books/itemlist/tag/Books.
நன்றி.
அன்புடன்
பிந்து வினோத்
நிறுவனர் - Chillzee KiMo
மின்னஞ்சல் -