(Reading time: 3 - 6 minutes)

Chillzee Stories Memorable quotes collection - 03 - March 2016

Memorable

1. 

இந்த சின்ன கப்புக்காக தானா இப்படி ராத்திரி பகல்ன்னு வேலை செய்தீங்க? என் கிட்ட கேட்டிருந்தா பேன்சி ஸ்டோர்ல இருந்து ஈசியா வாங்கி தந்திருப்பேனே............

- BINDU VINOD - Veesum katrukku poovai theriyatha - 30 - Shared by Valli

 

2. 

காதல் வலியை வாய் விட்டு சொல்லலாம்.. தாடி வளர்க்கலாம் ... இன்னொரு காதலியை கூட தேடிக்கலாம்... ஆனா நட்புக்கு இதேல்லாம் பண்ணின அந்த நட்பையே தப்பா பேசுவோம்.. ஆனா சத்தியமா இன்னொரு தோழியை நம்மால தேடிக்கவே முடியாது ..

- BUVANESWARI - Enna thavam seithu vitten - 24 - Shared by Devi

3.

உண்மை அன்பு இருக்கும் இடத்தில் புயல் வீசினாலும், தென்றல் வீசினாலும் எந்த மாறுபாடும் இல்லை... அன்பு எப்போதும் வெல்லும்...

- BINDU - Nee thanaa # 15 - Shared by Shanthi

4. 

திருமணம், ஒரு ஆணுக்கு  அவன் வாழ்வில் அது மகிழ்வின் உச்சம் ; வாழ்வின் அடுத்த கட்டம் .. ஒரு பெண்ணுக்கோ அது வாழ்வின் திருப்புமுனை .. இனி அவள் வாழ்வில் ஆயிரமாயிர மாற்றங்கள் ..அனைத்தும் அவளின் கணவனையும் அவனின் குடும்பத்தை சார்ந்தே இருக்கும் .. ஓர் திருமணத்திற்கு முன்பும் பிறகும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையில் வாழலாம் . ஆனால் பெண் ??? அவளின் ஒவ்வொரு அசைவும் அவனின் குடும்பத்தை பொறுத்தே நகரும் .. அதனாலோ என்னவோ, திருமணத்தில் மணமகளாய்  இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் குடும்பத்தின் நினைவுகள் மனதில் அலையாய் மோதும் .. பெற்றோர் உள்ளவர்களுக்கு தாயோ தந்தையோ அருகில் வந்து ஆறுதல் சொல்லலாம் .... இல்லாதவருக்கு ????

- BUVANESWARI - Verenna venum nee pothume - 26 Shared by Jansi

5. 

திருமணம் என்பது பெண் எனும் உயிருள்ள கொடியை மொத்தமாக வேரை பிடுங்கி வேறு ஒரு இடத்தில் பாத்தி செய்வது போன்ற நிகழ்ச்சி. அன்பு, பாசம், புரிதல், காதல், விட்டுக் கொடுத்தல் என்ற நற் பண்புகளினால் அது செழித்து வளரவும் செய்யலாம், பிடிவாதம், வெறுப்பு, பொறாமை, பேராசை என அந்த கொடி பட்டும் போகலாம்!
ஆனால், ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்புடன், நல்வழியில் இல்லறத்தை நடத்த, பெற்றோர், உறவினர், நண்பர் என அனைவரின் வாழ்த்துக்களுடன் நடைபெறும் திருமணம் மிகவும் அவசியமே!

- BINDU VINOD - Veesum katruku poovai teriyatha - 04 Shared by Anusha

6.

பெண் பார்வைக்கு மெல்லியவள் தான்
சிலவகை பயம் உண்டு இவளிடம் தான்.
பாசத்திற்குள் பதுங்குவாள்தான்
கொடுத்து, கொள்ளும், காதலிலும்
கணவனின் கைசிறை விரும்புவாள்தான்.
எனினும்
அவள் தாய்மையைத் தொட்டுப் பாருங்கள்
புயலும், பூகம்பமும், எரிமலையும், ஏழேழு கடலும்
எல்லா கொடும் விலங்குகளும்
துச்சம் இவள் முன் என்றாகும் காண்.

- ANNA SWEETY - Thendral thendral thendral vanthu... - Shared by Jansi

7. 

எப்போதுமே மனித மனத்தின் இயல்பு இதுதானே. நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை கொண்டு திருப்தி அடையாது. இல்லாத ஒன்றிற்காக ஏக்கம் கொள்ளும். அது கிடைக்கவில்லையே என்று வருந்தும்.

- RASU - Oru koottu kiligal - 09 - Shared by Thenmozhi

8.

காதல் இல்லை என்று மறுத்தால் இருப்பதை உணர்த்தி விடலாம்...காதல் உள்ளது ஆனால்
நான் அதை ஏற்க மாட்டேன் என்ற எண்ணத்தில் இருப்பவளை என்ன செய்வதாம் .. 

- Prama - Kanamoochi re re - 15 - Shared by Thenmozhi

9. 

அனைவரைக் காட்டிலும் சிறந்தது அன்பு தான்.. அன்புக்கு ஓர் உருவமில்லை.. ஆனால் ஒவ்வொரு உருவத்திலும் அன்பு உண்டு..

- BUVANESWARI - Enna thavam seithu vitten - 25 - Shared by Flower

10. 

"மேத்ஸ் சொல்லும் வாழ்க்கை தத்துவம் ரொம்ப பிடிச்சிருந்தது அதனால் அதை செலக்ட் செய்தேன்"

"கணக்குல தத்துவமா? இன்ட்ரஸ்டிங்! அப்படி என்ன தத்துவம் சொல்லுது?"

"உலகத்துல தீர்க்க முடியாத பிரச்சனை எதுவுமே இல்லை! எல்லா ப்ராப்ளமுக்கும் ஒரு பதில் இருக்கு!"

- BINDU VINOD - Veesum katruku poovai teriyatha - 08 Shared by Anusha

Feb 2016 quotes 

Apr 2016 quotes

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.