09. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு
காலம் யாரையும் எதிர்பார்க்காமல் அதன் வேலையை செவ்வனே செய்தது.
நாட்கள் வாரங்களாகி சில மாதங்கள் கடந்திருந்தன.
என்னென்னவோ மாற்றங்கள் நடந்துவிட்டன.
முதலில் ருத்ரதேவன் பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண் பெற்று தங்கமெடல் வென்று அவனது கல்லூரிக்கு பெருமையை தேடித்தந்திருந்தான். அவனது தாயாருக்கும் மகனின் வெற்றி பெருமிதத்தை தந்தது. இப்போது பி.எஸ்.எஸ் நிறுவனத்தில் ஒரு முக்கியமான ஆளாக ருத்ரதேவன் மதிக்கப்பட்டான். கம்பெனியின் வளர்ச்சிக்காக அவன் சொன்ன யோசனைகள் நல்ல ப
...
This story is now available on Chillzee KiMo.
...
முயன்றதில்லை. அவளாலும் அதை தாண்டி வெளி வர முடியவில்லை.
தகப்பன் ஸ்தானத்தில் இருக்கும் விஸ்வநாதனிடம் மரியாதையும் பாசமும்தான் பெருகுகிறது. நட்பு கொண்டாட முடியவில்லை. சிந்தனாவிடம் இருந்து அவளேதான் ஒதுங்கியிருக்கிறாள். சக்தியோ குழந்தை. அவளை புரிந்துகொள்ளும் அளவுக்கு அவனுக்கு வயது வரவில்லை.