“ஒரு காஃபி குடிக்கிறதால இங்கே எதுவும் குறைந்து விடப்போவதில்லை. அதுவும் நீங்க எங்க பிரியமான சுஜாவுக்கு அப்பா. உங்களை சும்மா அனுப்ப முடியுமா?” என்று கேலி போலவே பேசி அவனுக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுத்துதான் அனுப்புவாள்.
“சார்! நாங்க நாளைக்கு சினிமாவுக்கு போறோம். குழந்தையை காலையில் கொண்டு வந்து விடறீங்களா?”
அவனும் தலையாட்டினான். சற்று நேரத்தில் குழந்தையுடன் விடைபெற்று சென்றுவிட்டான்.
இரவு வேலைகளை முடித்துவிட்டு அறைக்குத் திரும்பினாள் நந்தினி. அங்கே சிந்தனா குழந்தைகளுக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தாள். அன்று ஒருநாள் மனவேதனை தாளாமல் இங்கே படுக்க வந்தவளுக்கு பிறகு தனது அறைக்கு செல்ல வேண்டும் என்பதே மறந்துவிட்டது. அறை பெரியதாக இருந்ததால் அவளுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
கிளிகள் பேசும் . . .