நந்தினியும் கண்ணனும் அவள் மேல் பக்தி வைத்திருக்கின்றனர். அவர்கள் வாழ்வை காப்பாற்றியதால் அவளை அவர்களால் ஒரு சாதாரண பெண்ணாக பார்க்க முடியவில்லை.
பகலவனும் அப்படித்தான். ஒரு காலத்தில் அவள் மீது விருப்பப்பட்டிருக்கிறான். இன்றோ அவளை எல்லோருக்கும் வரம் கொடுக்கும் தேவதையாகதான் பார்க்கிறான். அவன் பேச்சும் செயலும் அதைதான் காட்டுகிறது.
அவளை ஒரு பெண்ணாக பார்க்க ஒரே ஒருவன் இருக்கிறான். அது வசீகரன். அதுவும் அவன் கண்களுக்கு அவளுடைய அழகுதான் தெரிகிறது. வெறும் சதைப்பிண்டமாகதான் பார்க்கிறான். மனம் தெரியவில்லை.
அவனுக்கு மட்டும் சுஜயாவின் மனம் புரிந்திருந்தால் அவள் இத்தனை இன்னல்களை பட்டிருக்க மாட்டாள். ஏழையாக இருந்திருந்தாலும் சந்தோசமாய் வண்ணத்துப்பூச்சியாய்
...
This story is now available on Chillzee KiMo.
...
்தபோது இவ்வளவு நாட்கள் இதை அனுபவிக்காமல் போனோமே என்று தன்னையே நொந்துகொண்டாள்.
எப்போதுமே மனித மனத்தின் இயல்பு இதுதானே. நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை கொண்டு திருப்தி அடையாது. இல்லாத ஒன்றிற்காக ஏக்கம் கொள்ளும். அது கிடைக்கவில்லையே என்று வருந்தும்.
சிந்தனாவும் இதற்கு விதிவிலக்கல்ல.