“இல்ல. நான் வரலை. நீயே அழைச்சுட்டுப் போயிட்டு வந்துடு.”
“ஐயய்யோ! இந்த குட்டிப் பிசாசுகளையா?” போலியாக பதறினாள்.
இதைக் கேட்ட குழந்தைகள் அவளை முறைத்தனர்.
“சித்தி! இரு இரு. நீ அம்மாவை பிசாசுன்னு சொல்றியா? நான் அம்மாகிட்ட சொல்றேன்.”
ஆள்காட்டி விரலை அவளை நோக்கி மிரட்டினான் சக்தி.
இதற்குள் நெருங்கி பழகிவிட்ட சுஜாவும்
“நானும் எங்கப்பா கிட்ட சொல்றேன்.” என்று மிரட்ட
ரூபியோ தன் அன்னை எதிரேயே இருக்க தான் யாரிடம் சொல்வது என்று யோசிக்க சிந்தனா மிரண்டு போனாள்.
ஏற்கனவே தன் தமக்கைக்கு அவள் சூட்டிய பட்டங்கள் ஏராளம். இதில் எப்போது அவளை பிசாசு என்று சொன்னாள்? அவளுக்கு புரியவில்லை.
“ஏய்! நான் எப்படா உன் அம்மாவை
...
This story is now available on Chillzee KiMo.
...
முடிந்தது.
வேறெந்த கேள்வியும் கிடையாது.
பகலவன் வேலை முடிந்து சுஜாவை அழைக்க வந்திருந்தான். இதற்கு வசதியாக அவனும் பக்கத்திலேயே வீடு பிடித்து வந்துவிட்டான்.
“வாங்க சார்!” வரவேற்ற நந்தினி அவனுக்கு குடிக்க காஃபி கொடுத்தாள். ஆரம்பத்தில் மறுத்தான். ஆனால் நந்தினி கேட்கவில்லை.