(Reading time: 11 - 22 minutes)

நான் போய் விடுகிறேன்'' என்றது ஈ.

  

சின்னஞ் சிறிய கால்களை வைத்துக் கொண்டே , உலகில் பெரிய பெரிய நோய்களைப் பரப்புகின்றாய் நீ. வாலும் சேர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம். நான் படைக்கிற உயிர்கள் எல்லாம் வேக வேகமாக மறைந்து போய்விடும். என்று வருத்தப்பட்டார் பிரம்மா.

  

"கடவுளே நீங்கள் கொடுக்கும் வாலை நான் பத்திரமாக மேற்புறம் தூக்கி வைத்துக் கொள்கிறேன். தயவு செய்து எனக்கு வால் கொடுங்கள்' என்று கேட்டது ஈ.

  

"எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் உன் இனத்தைப் படைக்கத் தொடங்கும் பொழுதே உன் பாட்டாதி பாட்டன் கேட்டிருக்க வேண்டும். இப்போது இடைக்காலத்தில் நீ கேட்டால் எப்படிச் சேர்க்க முடியும். என்னால் முடியாது போ' என்று விரட்டி னார் பிரம்மா.

  

கடவுளே, என் பாட்டாதி பாட்டனுக்கு அறி வில்லை. வால் உள்ள விலங்குகள் எல்லாம் என்ன அழகாய் இருக்கின்றன. அதுபோல் ஈக்களாகிய நாங் களும் அழகாக இருக்க விரும்புகிறோம். தயவு செய்யுங்கள் கடவுளே.

  

"எங்களுக்கு வால் கொடுங்கள்” என்று ரீங்காரம் இட்டுக் கொண்டே பிரமதேவனைச் சுற்றி வந்து மீண்டும் அவரது உள்ளங்கையில் வந்து உட்கார்ந்தது.

  

"ஈயே தொந்தரவு செய்யாமல் போய் விடு. இடை நடுவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. ஒரு முறை படைத்தது படைத்ததுதான் என்றார் பிரம்மா.

  

கடவுளே! நீங்களே பொய் சொல்லலாமா? கோடி ஆண்டுகளுக்கு முன்னால், குரங்குகளைப் படைக்கும் போது, வால் இல்லாமல் தான் படைத்தீர்கள். இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தான் குரங்கு களுக்கு வால் கொடுத்தீர்கள். அதுபோல் ஈக்களுக்கும் கொடுத்தால் குறைந்தா போய் விடுவீர்கள்? என்று கேட்டது ஈ. இந்தச் செய்தி உனக்கு எப்படித் தெரி யும், நீ பிறந்து ஐந்து நாள் கூட ஆகவில்லை.

  

உனக்கு எப்படி இந்தப் பழைய செய்தி எல்லாம் தெரிய வந்தது? என்று வியப்புடன் கேட்டார் பிரம்மா.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.