(Reading time: 11 - 22 minutes)

  

நேற்று எங்கள் ஈக்காட்டுக்கு நாரத முனிவர் வந்தார். நாங்கள் நல்ல வரவேற்புக் கொடுத்தோம். மணம் உள்ள மலர் மாலைகளால் அவருடைய தோள் களை அலங்கரித்தோம். எங்கள் குறையையும் சொன் னோம். அவர்தான் தங்களிடம். எங்களின் வேண்டு கோளைச் சொல்லும்படி கூறினார். உடனே ஈக்களின் அரசனாகிய நான் புறப்பட்டு வந்தேன். ஓஓ! இது நாரதன் குறும்பா? இதோ பார் ! ஈயே இலட்சம் ஆண்டுகளுக்கு முன் குரங்குகளுக்கு புதிதாக வால் கொடுத்தது உண்மைதான்.

  

எப்படித் தெரியுமா? குரங்குகளின் அரசன் என்னை வந்து வால் கொடுக்கும்படி கேட்டான். வால் உள்ள உயிர் வகைகளில் யாராவது, தங்களுக்கு வால் வேண்டாம் என்று சொன்னால் அவர்கள் வாலை நறுக்கி உனக்கு ஒட்ட வைக்கிறேன் என்று சொன்னேன். உடனே குரங்கரசன் ஓடிச் சென்று அப்போது பூவுலகை ஆண்டு கொண்டிருந்த மா மன்னன் மனுவை அழைத்து வந்தான். மனு தனக்கு வால் இருப்பது தொல்லையாக இருக்கிறது என்றும், அதைக் குரங்குகளுக்குக் கொடுப்பதற்கு மகிழ்ச்சியாக ஒப்புக் கொள்வதாகவும் கூறினான். மனுவின் ஒப்பு தலின் பேரில் மனிதர்களின் வால்களை வெட்டிக் குரங்குகளுக்கு வைத்தது உண்மை.

  

அதுபோல் நீயும் ஏதாவது வால் உள்ள விலங்கு களைக் கூட்டிக் கொண்டு வந்து, அவை தம் வாலை உனக்குக் கொடுக்க ஒப்புக் கொண்டால், நான் அந்த வாலை எடுத்து உன் இனத்திற்கு ஒட்டிவைக்கிறேன். போ , ஏதாவது வால் உள்ள உயிர் இனத்தின் தலை வனைக் கூட்டிக் கொண்டுவா என்றார் பிரம்மா. ஈ பறந் தோடியது, பிரம்மா அமைதிப் பெரு மூச்சு விட்டார்.

  

போன ஈ திரும்ப வரவே வராது என்று அவருக்குத் தெரியும். அதனால் அமைதியாகத் தம் படைப் புத் தொழிலில் மீண்டும் ஈடுபட்டார்.

  

ஆனால் பூவுலகுக்கு வந்த ஈ சும்மா இருக்க வில்லை. உலகத்தைச் சுற்றத் தொடங்கியது. காடு மலை ஆறு வயல் கடல் என்று எல்லா இடங்களுக்கும் சென்றது. ஆங்காங்கே உள்ள , வால் உள்ள உயிர்களைப் பார்த்துப் பேசியது.

  

முதலில் அது ஓர் ஆற்றுக்குச் சென்றது. அங்கே தன் அரசியுடன் மகிழ்ச்சியாக நீந்திக் கொண்டிருந்த மீன் அரசனைச் சந்தித்தது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.