"மீனே, உன் அழகான வாலை எனக்குத் தருகிறாயா? எனக்கு வால் வேண்டும் என்று ஆசை யாக இருக்கிறது. கடவுள் உன் ஒப்புதலைக் கேட்டு வரச் சென்னார் என்றது.
"ஈயே, நீ நினைப்பது போல் என் வால் அழகுக் காக இல்லை. வால் இருந்தால் தான் என்னால் அந்தப்பக்கம் இந்தப் பக்கம் திரும்ப முடியும். இல்லா விட்டால் பெரிய அவதியாகி விடும். ஆகையால் என் வாலைக் கேட்காதே. வேறு யாரையாவது போய்ப் பார்” என்றது மீன் அரசன்.
ஈ சோர்வடையவில்லை. நேராக ஒரு காட்டை நோக்கிப் பறந்தது.
காட்டில் ஒரு மரத்தில் இருந்த மரங்கொத்தியைப் பார்த்தது ஈ.
மரங்கொத்தி, மரங்கொத்தி! உன் அழகான வாலை எனக்குத் தருவாயா? நீ ஒப்புக் கொண்டால் உன் அழகான வாலை எனக்கு ஒட்டி வைப்பதாகக் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார்' என்றது.
அந்த மரங்கொத்தி ஈயைப் பார்த்தது. "என் வாலை நான் என்ன அழகுக்காகவா வைத்திருக் கிறேன். நீ இப்போது பார்” என்று கூறி மரத்தைக் கொத்தத் தொடங்கியது.
அது தன் வாலை மரத்தின் மீது சாய்ந்துக் கொண்டு தன் முழு உடலையும் வளைத்துக் கொண்டு தன் மூக்கால் மரத்தில் வலிமையாகக் கொத்தியது. ஒவ்வொரு முறை மரத்தைக் கொத்தும் போதும், வாலை நன்றாக ஊன்றிக் கொண்டு, உடலை வளைத்து முழுசக்தியையும் பயன் படுத்தியது. ஒவ்வொரு கொத்துக் கொத்தும் போதும் மரத்தூள்கள் சிதறிவிழுந்தன. மரத்தில் துளை உண்டாக்கியது.
மரங்கொத்திக்கு வால் எவ்வளவு பயன்படுகிறது என்பதை ஈ நேரில் பார்த்தது. மரங்கொத்தி மரங் கொத்தி என்னை மன்னித்துக்கொள். நான் வேறு யாரிடமாவது போய் வால் கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து பறந்தது.
போகும் வழியில் ஒரு புதர் மறைவில் மான் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் சிறிய