பண்டிகைகளை அறிவோம் - கொல்லங்கோடு தூக்கம் திருவிழா
தமிழ்நாடு கேரளா பார்டரில் அமைந்திருக்கும் கொல்லங்கோடு கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ பத்ர காளி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழா இந்த தூக்கம் திருவிழா.
தமிழ்நாடு – கேரளா பார்டரில் அமைந்திருப்பதால் தமிழ் – மலையாள கலாச்சாரம் கலந்தே இங்கே தெரியும்.
பிரிட்டிஷ் காலத்தில் இந்த பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழே உட்பட்டிருந்ததாலும் கூட இந்த கலாச்சார கலவை என்று சொல்வார்கள்.
தூக்க நேர்ச்சை
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வரும் பரணியை முன்னிட்டு பத்து நாட்கள் இந்த தூக்கம் திருவிழா நடைப்பெறும்.
இந்த பத்து நாள் திருவிழாவில் ஒரு நாள் தூக்க நேர்ச்சை நடத்தப்படுகிறது.
குழந்தை பாக்கியம் வேண்டியும், பெற்ற குழந்தைகள் நோய் இல்லாமல் நல்ல அறிவு பெற்று நீண்ட காலம் நலமுடன் வாழவும் தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது.
விழாவின் போது ஒரே நேரத்தில் ௮ குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது.
சுமார் 30 - 40 அடி உயரமுள்ள வில் பூட்டப்பட்ட ரதத்தில் ஒவ்வொரு வில்லிலும் 2 தூக்கக்காரர்கள் (மொத்தம் நான்கு பேர்) இருப்பார்கள்.
இந்த தூக்கக்காரர்கள் குழந்தையை தூக்கி கொண்டு ரதத்தில் கோவிலை ஒரு முறை சுற்றி வரும் போது நேர்ச்சை நிறைவேற்றப்பட்டதாக கருதப் படுகிறது.
திருவிழா
பத்து நாள் திருவிழாவான தூக்கம், தெய்வங்களை ஊர்வலமாக கோவிலுக்குள் அழைத்து வருவதில் தொடங்குகிறது.
அது முதலே ஊருக்கு திருவிழா களை வந்து விடுகிறது.
திருவிழாவிற்காக போடப்பட்ட சின்ன சின்ன கடைகள், காலை முதலே கோவிலுக்கு படை எடுக்கும் மக்கள் என, அந்த பத்து நாட்களும் அந்த பகுதியே ஜேஜே என இருக்கும்.
தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
விரதம் இருப்பவர்களுக்காக சிறப்பு உணவும் வழங்கப்படும்.
தினம் தினம் பல விதமான கலை நிகழ்சிகளும் நடைப்பெறும்.
மக்கள்
1500 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் திருவிழா என்பதால் கூட்டத்திற்கு குறைவு இருக்காது.
அதே போல மக்கள் மத நல்லிணக்கத்துடன் வாழ்பவர்கள் என்பதால் திருவிழாவில் பரவலாக மற்ற மதத்தினரையும் பார்க்கலாம்.
01. பண்டிகைகளை அறிவோம் - ஆடி 1 - தேங்காய் சுடுதல் - கீர்த்தனா
உங்களுக்கு தெரிந்த இது போன்ற பண்டிகை / விழாக்களையும் கூட பகிரலாம் பிரென்ட்ஸ்.
நீங்கள் சொல்ல விரும்பும் விழாவை பற்றி எழுதி எங்களுக்கு
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
{kunena_discuss:747}