பிடித்த கதைகளை போலவே இன்னமும் நன்றாக எழுதி இருக்கலாம் என நான் நினைக்கும் கதைகளும் உண்டு.
அதில் முதல் இடம் விளக்கேற்றி வைக்கிறேன் கதைக்கு தான்!
அது என்னவோ அந்த கதையில் ஏதோ மிஸ் ஆவது போலவே எனக்குள் ஒரு எண்ணம்!
இந்த தொடரை நான் எழுத தொடங்கியதின் பின்னே சின்ன சுயநலமும் உண்டு!
என்னவோ ஏதோ என்று நினைக்காதீர்கள்!
பொதுவாக மனதில் தோன்றும் கதை கருவை மொபைலில் சேவ் செய்து வைப்பது என் வழக்கம்.
என் வலதுக் கையாக இருந்த S3 திடீரென டிஸ்ப்ளே வராமல் போக, அந்த வேலையை இங்கே செய்யலாமே என்று தான் முதலில் தொடங்கினேன்!
இப்போது S7 & S3 இருவருமே ஆக்டிவாக இருக்கிறார்கள்!
நான் சொல்ல வருவது உங்களுக்கு புரிந்து விட்டதா??
இந்த தொடருக்கு இங்கேயே ஒரு logical முடிவு கொடுக்கலாம் என நினைக்கிறேன்!
மீண்டும் போன் ரிப்பேர் ஆனால் என்றில்லாமல் எனக்கே எழுதும் ஆர்வம் & நேரம் கிடைக்கும் போது இதே போல இன்னுமொரு தொடரின் மூலம் உங்களை கட்டாயம் சந்திக்கிறேன்!
என் கதைகளை பற்றி எழுதுவது எனக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது!
என்னை நானே ஒரு critic ஆக இருந்து பார்க்கும் ஒரு வாய்ப்பையும் தருகிறது!
எனவே கட்டாயம் உங்களை இது போன்ற வேறு ஒரு தொடரில் சந்திக்கிறேன்!
பை சொல்லும் முன், ஒரு ஸ்பெஷல் நன்றி!
ஏழு ஆண்டுகளாக எழுத ஒரு தளம் கொடுத்து, எனக்குள் என்னையே அறியாமல் இருந்த திறமையை வெளி கொண்டு வர வைத்து, ‘Even I am talented!’ என தைரியமாக இன்று சொல்லும் அளவிற்கு என்னை கொண்டு வந்திருக்கும் chillzeeக்கும், வாசகர்களுக்கும் என் அன்பு நன்றிகள்!
உங்கள் அனைவரின் அன்பிற்காக ‘மட்டுமே’ இன்னும் பல பலக் கதை கொடுக்க முயற்சி செய்வேன்!!!!
நன்றி! வணக்கம்!
நிறைந்தது!
{kunena_discuss:1105}