அடக்கமாயிருந்தால், அறிவு பெருகி அன்பு தழைத்து தூய்மை அடைகிறோம்.
நிறைய நண்பர்களை பெறுகிறோம். சுயபரிசோதனை செய்துகொள்ள அடக்கம் உதவுகிறது. இறைவனின் குரலைக்கேட்க நம்மை தயார்ப்படுத்திக்கொள்கிறோம்.
வாழ்வின் எந்த கட்டத்திலும், எல்லாம் தெரியும் என கர்வப்படும் நிலையை அடையமுடியாது. அடக்கம் கடவுளின் பரிசு! "கலாசாரமும் தூய்மையும் அடக்கத்தின் தாய்!" என்கிறது, திருக்குறள்.
ஞானத்தின் அறிகுறி, அடக்கம்! அவ்வப்போது, நாம் எந்த அளவு கற்றுக்கொண்டுள்ளோம், இன்னும் என்னென்ன கற்கவேண்டும் என்பதை உணர அடக்கம் உதவும்.
பிறரோடு ஒப்பிட்டுக்கொள்ளாதே! அப்பப்பா! ஜீவராசிகளிலேயே மிகவும் அதிகமான வேறுபாடுகளை மனித இனத்தில்தான் காணமுடியும்.
ஆப்பிளுடன் மாங்காயை ஒப்பிடுவதுபோலத்தான்!
நீ வித்தியாசமானவன்! நீ படைக்
...
This book is now available on Chillzee KiMo. Please upgrade to read the book.
...
ாக, அமைதிக்கு வழி தேடுங்கள்.
உண்மையான மன்னித்தல், அந்த வினாடியே ஏற்படுவதல்ல, அதற்கு கொஞ்ச காலமாகும். கடினமானதும்கூட!
தப்பு நடந்ததை மன்னித்து மறக்கா விட்டால், மன உளைச்சல் நீங்க நீண்ட காலமாகும்.
அதனால், நமது நன்மைக்காகவே மன்னிப்பு கோரவும், வழங்கவும் தாமதம் செய்யக்கூடாது.