(Reading time: 1 - 2 minutes)

 

மனிதா மாறிவிடு!!!

ஆதி மனித காலம்,

எங்கள் வாழ்வின் வசந்த காலம்!

பாரெங்கும் பரந்து வளர்ந்தோம்,

பார்ப்போர் கண்ணில் பரவசம் நிறைத்தோம்!

வானம் வாழ்த்தி பொழிந்தது மாதம் மும்மாரி,

வளமாய் செழித்து கொழித்து பூமி!

எங்கும் நிரம்பி வழிந்தது ஏரி,

மகிழ்ச்சியில் திளைத்தனர் மக்கள் பாரிர்!

இயற்கை அன்னை பசுமை போர்வை

போர்த்தி வலம் வந்த பொற்காலம் அது!

 

ஆனால்.... இன்றோ...............

 

இயற்கையின் ஆட்சி அழிந்து,

இயந்திர ஆட்சி தலை தூக்கும் நேரம்!

மக்கள் வறட்சியின் கோரபிடியில்

மாட்டி தவிக்கும் கலி காலம்!

நல்ல காற்றினில் நச்சு அரக்கனின்

அகோர ஆதிக்கம்!

மழை தேவன் பூமிக்கு வரவே

அஞ்சி நடுங்கும் அவலம்!

எங்கள் இருபிடமோ தொழிற்கூடமாய்

மாறி வரும் கொடூரம்!

எங்கு நோக்கினும் மாசு காலனின்

கட்டுகடங்காத அராஜகம்!

இனியேனும் சிந்தித்திடு மனிதா!!

இந்நிலை நீடித்தால் உன்னிலை என்னவென்று !

இனி வரும் உன் வருங்காலம்

இன்புற்று இருக்க இன்றேனும் வழி செய்திடு!

எனை வெட்டி வீழ்த்துவதை விட்டுவிட்டு

நட்டு நாளும் நலம் பெரு!

மனிதா இதன் பின்னேனும் நீ மாறிவிடு!!!

எங்களையும் வாழ வழி விடு!!!!!

இங்ஙனம்,

மரம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.