(Reading time: 2 - 3 minutes)

13. இளம்பூவை நெஞ்சில்...  - மீரா ராம்

மெய்மறந்து போனதென்ன???!!!…

Ilam poovai nenjil

என்ன சொல்லி என் மனம் உரைப்பேன்?..

எப்படி சொன்னால் உனக்கு புரிந்திடும்?..

யோசித்து யோசித்து பைத்தியமே பிடித்திடும் போலடா…

இன்றல்ல நேற்றல்ல…

உன்னை நெஞ்சுக்குள் சுமக்க ஆரம்பித்த நொடி முதல்

உன்னிடம் காதல் சொல்லும் ஒவ்வொரு நாளும்

என் நிலை இதுதான்…

மூச்சுக்குப் போராடி, வார்த்தைகளைத் தேடி….

ஐயோ…. எத்தனை நிகழ்வுகள்…

சொல்லி மாளாது என்னால்…

ஆனாலும் உன்னிடம் காதல் சொல்லித்தான் தீருவேன்…

அதிலிருந்து மீளும் எண்ணம் சற்றும் இல்லை…

இத்தனை விதங்கள் இருக்கிறதா காதலை சொல்லிடவும்??...

அறிந்திருக்கவில்லை நானும் முன்புவரை…

எனினும் நீ கொடுக்கும் சந்தர்ப்பங்கள், சமயங்கள்

அதை அனைத்தையும் மீறி என் மீதான உன் காதல்

எனக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்து விடுகிறது…

உன்னிடம் என் காதலையும் விவரித்து சொல்ல வைத்திடுகிறது…

எப்படியடா முடிகிறது உன்னால் மட்டும்?..

இப்படி கூடவா காதலிக்கமுடியும்?...

உன்னைப் பார்த்து தான் வியக்கிறேன்…

என்ன செய்து உனக்கு நான் ஈடு தர முடியும்?

தெரியவில்லையடா…

காலம் உள்ள மட்டும் உன்னால் கரைந்து

உனக்காக உருகி, உன்னில் தொலைந்து போக

மட்டும் எண்ணம் உள்ளது…

ஆசை ஆசையாக இருக்கிறதடா கண்ணா…

உன் கைகோர்த்து உன்னுடன் வாழ…

ஆசைக்கனவுகளோடு சிரித்து மகிழ்வதே

போதும் என்றென்ணிவிட்டாளோ…

அப்படியே சிலையாக அல்லவா இருக்கிறாள்…

கொஞ்சமும் அசையாது…

ஹ்ம்ம்…

தூரிகையில் உன்னை நிற்கவைத்து

தாரிகை இவளும் மெய்மறந்து போனதென்ன!!.. என் ராஜா!!! 

பூ மலரும்……….

Ilam poovai nenjil 12

Ilam poovai nenjil 14

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.