சின்ன சின்ன இரசனைகளில்
இணைந்து நின்றோம்
இதுவல்லவோ அன்பின் இலக்கணம்
என்று கர்வம் கொண்டோம்
சின்னதாய் சண்டை வந்ததும்
முகம் பார்க்க பிடிக்காமல் ஒதுங்கிவிட்டோம்
எங்கே போகின்றதோ புரிதல் ?
நீயின்றி நானில்லை என்கிறோம்
இரவையும் பகலையும் இலக்கியம் பேசி களிக்கிறோம்
மனம் நோகும் சுடுச்சொல் கேட்டுவிட்டால்
இவ்வளவு தானா நீ ? என்று உடைந்துபோகிறோம்
எங்கே போகின்றதோ புரிதல் ?
அழகழகாய் கவிதை வடிக்கிறோம்
கிறுக்கல்களுக்கும் பாராட்டு வாங்குகிறோம்
கோபம் என்ற பெயரில் வார்த்தைகள் சிதறிவிட்டால்
"ச்ச " என்ற சலிப்புடன் பின்வாங்குகிறோம்
எங்கே போகின்றதோ புரிதல் ?
உன்னை நான் அறிவேன் என்கிறோம்
என்னில் அனைத்தும் நீ என்கிறோம்
எவனோ எவளோ சொல்லும் கதைகேட்டு
அன்பில் நிறைந்தவரை அக்கினியில் நிற்க வைக்கிறோம்
எங்கே போகின்றதோ புரிதல் ?
மன்னிப்பு கேட்க நினைத்தாலும்
நமக்குள் எதற்கு மன்னிப்பென பெருந்தன்மையில் மிளிர்கிறோம்
உரிமையில் மன்னிப்பு கேட்காமல் போனாலோ
திமிர் தான் உனக்கு என உரைக்கிறோம்
எங்கே போகின்றதோ புரிதல் ?
கண் கலங்கினாலே காற்றை திட்டுவோம்
மாசற்ற காற்றை மனம் பிடித்தவருக்கு அனுப்பி வைப்போம்
மீண்டும் கண்ணீருக்கு காரணமாய் நாம் மாறிட
அதை ஏற்றுக்கொள்ளாமல் தட்டி கழிப்போம்
எங்கே போகின்றதோ புரிதல் ?
எந்த நேரமும் அருகில் இருப்பேன் என்போம்
கிடைக்கும் நொடிகளில் எல்லாம் அன்பை நிரப்புவோம்
முக்கியத்துவம் தன் தலைமைத்துவத்தை காட்டிட
தடம் தெரியாமல் விலகிவிடுவோம்
பிரிதலில் மெல்ல சாகின்றதோ இன்றைய புரிதல் ?
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
எங்கு எதிரப்பார்புகள் இல்லாமல் போகிறதோ அங்கு அன்பு நிறைந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. எங்கு அன்பு இல்லாம போகிறதோ அந்த இடத்தில் எதிர்பார்புகளுக்கும் வேலை இருப்பதில்லை.
சின்னச்சின்ன ஒற்றுமைகளில் இன்பம் கண்டு திளைத்து நிற்கும் மனது சின்னச்சின்ன சண்டைகளையும் அந்த கோபங்களிற்கு பின் ஒளிந்துள்ள உரிமைகளையும் அன்பையும் எதிர்பார்ப்புகளையும் காணவேண்டும். அப்படி காணவதுதான் புரிதல்.
அன்பே முக்கியத்துவம் வாய்ந்ததுதான். யாரோ ஒருவரிடம் அன்பையும் முக்கியத்துவத்தையும் எதிர்பார்த்திடமுடியாது. அன்பு வைத்த ஒருவரிடம்தான் மனம் முக்கியத்துவம் தேடுகிறது.
தன் இடம் பிறருக்கு கொடுக்கப்படும்போது அல்லது தனக்கு இணையாக பிறர் வரும்போதோ மனம் பயம் கொள்வதும் முக்கியத்துவம் தேடுவதும் இயல்பு. எந்த மனம் பிடித்தவரிடம் முக்கியத்துவம் கேட்க்கவில்லையோ அந்த உள்ளத்தில் ‘’ முக்கியத்துவம் “ என்ற வார்த்ததையும் இடமும் வேறு யாரோ ஒருவரால் நிரப்பப்பட்டுள்ளது என்பது அர்த்தம்.
கேள்விகள் உதாசீனப்படுதத்ப்படும்போதோ பதில்கள் மறுக்கப்படும்போதோ அதுவரை கவனிப்பாரற்றுக்கிடந்த பிரிவு என்னும் வாசல் திறந்து கொள்கின்றது அன்பு கொண்டவரின் வேளியேற்றத்திற்காக.
தாய் ஒருபோதும் தன் குழந்தையை மறப்பதில்லை. அதை குழந்தையும் அறியும். ஆனாலும் குழந்தை அழமால் இருப்பதில்லை .தன் இருப்பை தாய்க்கு உணர்த்தவும் தாயின் அருகாமையை வேண்டியுமே குழந்தை அழுகிறது. குழந்தை தாயிடம் எதிர்பார்ப்பது தாயின் அருகாமை என்ற முக்கியத்துவத்தை அதை கொடுக்கவேண்டியது தாயின் கடமை.
குழந்தையின் அழுகைபோன்றது பிடித்தம் கேட்கும் முக்கியத்துவம். ஏமாற்றங்களுக்கு பதில் அருகாமையை கொடுத்துவிட்டால் ‘’ ‘புரிதலில் மெல்லச் செத்துவிடும் பிரிதல் ‘’
nalla nunakamaana vishangala mention pannirukeenga, Interesting.
I'd like to mention something my friend said:
Love pannumpodhu andha ponnu enaku than nu aagara varaikum impress panna try pannuvom. confirm aagita nammalodadhu thana nu oru feeling vandhurum. Maybe adhuku apram the charm fades off.
When we long for something it seems precious, once we own it the worth goes down.
Purithal purinthukolla padumanal maangalya pantham magathuvam perum.
Naan paarpathai kavidhai varigalil kaatti vittergal.
Arumai
soooppperrrrr di chellam
Nallakaruthu arumaiyana varigal