மகளிர் தினம்.... - தங்கமணி சுவாமினாதன்
மார்ச் 8 மகளிர் தினம்...
மகளிர் தலையில் .மணி மகுடம்?
குப்பிக்கும்,சுப்பிக்கும் தெரியுமா..?
மகளிர் தினம்..
மாடுகளுக்கோர் நாள்..
மாட்டுப் பொங்கல்..
ஆயுதங்களுக்கோர் நாள்
ஆயுத பூஜை..
மாடுகள் அஃறிணை.....
ஆயுதமோ ஜடப்பொருள்...
பெண்களாம் மகளிர்-இதில்
எந்த வகை?
"மகளிர் தின நல் வாழ்த்துக்கள்"
காலை முதல் இரவு வரை-விடாது
வாழ்த்தும் தொலைக்காட்சி..
ஹேப்பி"விமென்ஸ் டே"செயற்கயாய்
வாழ்த்தும் ஆண்கள்..
அன்றாட வேலைகள் அன்று மட்டும்
இல்லையா என்ன?
ஒட்டக முதுகிலிருந்தோர்..
தீப்பெட்டி எடுத்து-அது
பார்க்கக் கீழே போட
தன் முதுகில் சுமைகளேயில்லையென
சுமக்க மாட்டா சுமைகளைச்
சுமந்து ஓடுமாம் ஒட்டகம்-அது போல
வருடம் ஓர் நாள் அடிமைகளுக்கு
வாழ்த்துச் சொல்லும் ஓர் நாள்..
பாராளு மன்றத்தில் 50% என்ன..
33%என்று கிடைக்குமோ அன்னாளே
நமக்கு மகளிர் தினம்..
அது போல் என்றும் நடந்து விடாது..
அடிமை நமக்கது கிடைத்து விடாது..
விடு..எனதருமைச் சகோதரி....
மகளிர் தினம் என்பதெல்லாம்-நம்மை
மடச்சியாக்கவேயன்றி..
மணிமகுடம் சூட்டவல்ல...