சாமியாடி - ராஜலக்ஷ்மி
கொடை கொடுத்தாயிற்று ...
பலி இட்டாயிற்று ...
கோடங்கி சாமியாரும்
குறி சொல்லும் நேரமிது !
நெஞ்சமெல்லாம் வஞ்சம்
நினைவெல்லாம் பகை
சிரசெல்லாம் கர்வம்
சிந்தையெங்கும் சுயநலம்
நம்மையா வந்து சேரும் தெய்வம் ?. .
பணக்கார கடவுளென்றும்
பண்டாரக் கடவுளென்றும்
பிரித்து பொருள் கொண்டது
மனிதமேயன்றி தெய்வமல்ல . . .
வணங்கினால் வரம் . .
இல்லையேல் சாபம் ...
மாந்தர்க்கு இயல்பிது
கருணைக் கடலுக்கு பொருந்தாது
உயிர்களிடத்து அன்பு நோக்கும்
உயிர்ப் பலி கேட்காது . . .
இன்ன இன்ன செய்தால்
இன்ன பொருள் கிட்டும் - என்று
கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ள
கடவுளொன்றும் வனிகனல்ல
தீ மிதித்தல்
தினம் நோன்பு
மண் சோறு
அங்கப்ரதட்சணம் என்பீர் !
அத்துணையும் இயற்றியவர்
மாந்தர் தாமே !
ஆலயங்களிலும் செய்து வைத்தீர்
அவலங்கள் பல . . .
செல்வந்தர்க்கு சிறப்பு வழி
இல்லாதோர்க்கோ பொது வழி - பின்
ஆண்டவன் முன் அனைவரும்
சமமாம் ! ! !
மாய்ந்து போன மனிதத்தை
மீட்டெடுப்போம் மாந்தரே ! - பின்
கோடி கோடி தெய்வங்கள்
குடி கொள்ளும் உமதுள்ளத்தில்.
{kunena_discuss:779}