கவிதை - வாழ்க்கையின் வாழ்வு... - நூர்
கருவில் இருந்த காலம் முதல்
தாய் மாரில் பால் குடித்து,
நண்பர்கள் கரம் கோர்த்து
கல்வி கற்ற காலம்
கல்லூரி வரை நான்
வாழ்ந்த வாழ்வு தான் இனிது
என்பது அல்ல வாழ்வு..!,
கல்யாணம் செய்த காலம் முதல்
மனைவிக்கு அன்பிற்குரியவனாய்,
மகளுக்கு தந்தையாய்
அவர்கள் வாழ நான் உழைத்து ,
இவர்களோடு இன்பத்தில் மார்தட்டி
மகிழும் வரை தான் வாழ்வு இனிது
என்பதுவே வாழ்வு..!
{kunena_discuss:779}