தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 11 - கண்ணம்மா
பொளவ்வுக்கு ஊசி போட வந்த டாக்டரே நடுங்கும்படி இருந்தது ஈஷ்வரும் கொடியும் அலரியது. அவள் சுய நினைவில் இருந்தால் டாக்டர் அவள் பக்கத்தில் கூட வரமுடியாதே என்று கொடி யோசித்து வருந்த. பூப்போல் இருக்கும் என்னவள் இந்த வலியைத் தாங்குவாளோ என்று வருந்தினான்.
(யார் சொல்வதாம் இவனுக்கு, ஒரு நாள் இரண்டு நாள் அல்ல மூன்று வருடங்களாக இவனை மட்டுமே நேசித்து அவனுக்காகவே உருகி, வீட்டில் உல்ல அனைவரையும் வருத்தியல்லவா இருக்கிறாள். அவள் தன் உயிரையே வைத்திருந்த குடும்பத்தின் மனவலியையும் தாண்டியல்லவா இவன் அவளுக்குப் பெரியதாய் போய்விட்டான். சாகும் நாள்ளிர்கு முன்னாள் கூட பௌவ்வின் திருமணத்தைக் காணவேண்டும் என்று கேட்ட சிவகாமி பாட்டி. கணவனும் மனைவியும் சேர்ந்து அவளை விட்டுச் சென்றபின்னும் அவள் திருமணத்தை பார்க்க அந்த வீட்டையே சுற்றி வரும் பாரிஜாதம் பாட்டியும் பரணி தாதாவும் கூட அவள் பிடிவாதத்தை உடைக்க முடியவில்லையே.) உன்னைவிட அவளை வருத்தியது யாரும் அல்ல டா மடையா .... [ சாரிங்க கொஞ்சம் பொங்கிட்டேன்]
அவள் உடல் தேர அந்த ஊசி அவசியம் என்பதைப் புரிய வைத்து ஒரு வழியாக டாக்டர் ஊசியைப் போட போகக் கொடி கதவைத்தாண்டி படிகட்டில் நின்றுகொள்ள, ஈஷ்வர் தன் மடியில் கிடந்தவளை அணைத்தாற்போல் பிடித்துக் கொண்டு
ஒன்றும் இல்லைடா
சரியாபோச்சி
அவ்ளோதான்
தோ ... முடிஞ்சிடுச்சி என்று
டாக்டர்ரின் பொறுமையை சோதித்தான். ஒரு வழியாக ஊசி போட்டுவிட்டு அவர் எனர்ஜிகாக குலுகோஸ் சாப்பிட்டார். அட போங்கப்பா .... என்று கிளம்பியும் விட்டார். கிளம்பும்போதே டெம்ப்ரேச்சர் கொஞ்சம் இக்கும் பயப்படாதிங்க, லிக்கூயூடு ஐட்டம் தரலாம் என்று இடத்தை காலி செய்தார்.
அவள் தலையை வருடியவன் தூக்கத்திலேயே அவளுக்குக் கஞ்சியை புகட்ட மாத்திரையையும் போட்டு விட்டான். அவள் பக்கத்திலேயே அவனும் தூங்கியும்விட்டான்.
மாலை 6மணி: பௌவ்வியின் வீடு. மாமனும் மாமியும் தங்களின் பௌவ்வியை கான அவள் அறைக்குச் செல்ல அவர்களுக்கு காணக்கிடைத்தது அவள் அறை அடையச் செல்லவேண்டிய படிகளில் அமர்ந்த வாக்கில் உறங்கிய கொடியைத் தான். தன் மகளைப்போல பார்த்துக் கொண்டிருக்கும் தன் பௌவ்வியம்மா இவ்வளவு நாள், அதாகப்பட்டது 2 நாள் வீட்டில் இல்லை. தன் அத்தையை கவனித்துக் கொல்லச் சென்றமையால் அவரால் தான் பார்த்துப் பார்த்து பூரிக்கும் தன் கவலைகளை அனைத்தையும் கலையும் தேவதையை காணாமல் அவர் சரியாக சாப்பிடாமல் தூங்காமல் இருந்ததும், பின் காலை வீட்டுக்கு வந்தவள் தன் முகத்தைக் கூட காட்டாமல் சென்றதும், பின் அவளுக்கு உடல் சுகம் இல்லாமல் வாடிப்போய் கிடந்தது பார்த்ததில் மனவலியும். அவளைக் குழந்தையாய் கவனித்துக் கொள்ளும் தன் பெரியையாவின் பேரனையும் அவன் பாசத்தையும் கண்டவரின் உள்ளம் மகிழ்ந்தது. இந்த அலப்பறையில் தான் அவர் மருத்துவர் சென்றதும் படியில் அமர்ந்தது. அதன் பின் தன்னை மறந்து தூங்கியும் போனார்.
கமலேஷ் தன் தங்கையின் மகளின் மீது தன்னுடன் வளர்ந்தவன் இந்தக் கொடி அவன் வைத்திருக்கும் பாசம் அவனைச் சுட்டது. தன் தங்கையை அவன் தங்கையாய் நினைத்துத் தான் அவள் மீது அளவில்லா பற்றுதலுடன் இருந்தான். தன் தந்தையையும் தாயையும் எந்த நேரத்திலும் தனியாக விடாமல் காத்தான். ஏன் இவ்வளவுக்கு அவன் இன்னும் திருமணம் கூட செய்து கொல்லாமல் அல்லவா இருக்கிறான்.
தன் தாய் அவனையும் தன் மகன் என்று கூருவது நினைவுக்கு வந்தது. தான் தன் குடும்பத்தைத் தனியாக விட்டதை நினைத்து வருந்தினார்.
கொடி... என்று அவன் தோலைத் தட்ட எந்நப்பா கமல் என்று எழுந்து நின்றார் அவர். கணிமுன் தன்னைச் சின்னையா என்று அவன் அழைத்தது நினைவு வர, டேய் நம்ம பௌவ்வி எங்கடா என்றார் அவன்னுடனான தன் நட்பை பறைசாற்றும் விதமாய்.
பாபா தூங்குதுடா, டாக்டர் ஊசிவேர போடுட்டான் என் பிள்ளைக்கு என்று அவர் கவலைப்பட அவன் தோலில் தட்டி, டேய் அது அவள் நல்லதுக்குத் தான் வா போய் பார்ப்போம் என்று மேலே ஏறினர் அனைவரும். முதலில் கணிக்கும் கமலுக்கு இங்கு என்ன நடக்கிறது என்ற கேள்விதான். நண்பனைத் தானே காணப்போகிறேன் என்றான் பின் இங்கு அவள் அறையில் இவனுக்கு என்ன வேளை? இதுவே இப்படியா என்று நினைக்கும்படியாய், பொளவ் அவன் மடியில் சற்று அசைய அவன் தூக்கத்திலேயே அவள் முதுகைத் தட்டி தூங்கச் செய்தான்.
கணி கமலைக் காண அவரோ நடப்பதை எதையும் நம்ப முடியாமல் திகைத்தார். இரண்டு இரண்டரை வருடத்திற்கு முன் இவளைக் திருமணம் செய்துகொள்ளும்படி குடும்பமே இவன் பின் அலைந்தோம் அப்போது மருத்து விட்டு இப்போதோ அவளை தன் மடியில் போட்டு தட்டிக் கொண்டிருக்கிறான். இவனை என்ன செய்வது என்று அவருக்கு ஆதிரமே வந்தது.
தங்கையின் மகள் இவன் மருதிராமல் இருந்திருந்தால் என் விட்டில் மாணிக்மாய் அலங்கரித்திருப்பாள் அதை நான் பார்த்திருப்பேன். என் குடும்பத்தையே மகிழ்ச்சியுடனும்