தோல்வி கண்டு துவண்டு போனாயா தோழா
தட்டிவிட்டு எழுந்து நில்
தாவிக் குதித்து ஓடி விடும் உன்னை விட்டு...
நினைத்ததை அடைய முடியாதது அல்ல தோல்வி...
விழுந்த இடத்திலே மூழ்கிக் கொண்டு இருப்பதே தோல்வி...
எட்டா உயரத்தில் இருக்கும் வானைப் பார்
கதிரவனின் பிரகாசத்தில் மங்கிப் போகிறது மதியின் அழகு...
இரவு ஒன்று வருகிறது
வெளிச்சமிட்டுக் காட்டுகிறது
வெண் நிலவின் அழகை...
ஒற்றை நிலவின் அழகில் மயங்கி
கண் சிமிட்டும் நட்சத்திரத்தை மறந்து விடுகிறாய்...
நிலவு பெண் தேய்ந்து மறைந்து
அமாவாசை வருவது ஏன் தெரியுமா?
ரசிக்க மறந்த விண்மீன்களை
வியந்து நீயும் ரசித்திட தான்...
உனக்கென்றும் ஒரு நாள் உண்டு
உலகம் உன்னையே ரசித்துப் பார்க்கும்
தோல்வியைத் துடைத்து விட்டு தைரியமாக எழுந்து நில் ...
உன் பின்னால் உலகமே வரும்
நாள் ஒன்று காத்திருக்கிறது உனக்காக...