“இப்போ என்ன நான் ப்ரியாவை பார்க்க போகனும் அது தான” என்று நந்தன் கேட்க "ஆமா" என கோரசாய் பதிலளித்தனர் யாழும், கொளசியும்.
"மவனே இன்னைக்கு உனக்கு ஆப்பு ரெடியா இருக்கு டி" என்று வாய்க்குள்ளே முனகியவன் தன்னுடைய ராயல் என்பீல்டு வண்டியில் ப்ரியாவின் இல்லம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தான்.
"தட் தட்" என்ற ஒலியை கேட்டதும் திடுக்கிட்டவளாய் மணியை பார்த்தாள் க்ரிஷ்ணப்ரியா. 12 ஆக பத்து நிமிடங்கள் இருப்பதாய் காட்டியது. "இந்த நேரத்தில் யார் கதவை தட்டுவது இதுவரை இது போல நிகழ்ந்தது இல்லையே?" என்ற யோசனையிலே அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை கேட்க “யாரது” என்ற அவளது கேள்விக்கு எந்த பதிலுமில்லை.
ப்ரியாவின் வீட்டிற்கு வந்தது நந்தன் தானா? ப்ரியா கதவை திறப்பாளா? நந்தன் தன்னுடைய காதலை ஏற்று கொள்ள வைப்பானா? ப்ரியாவிற்கு ஆபத்தெனில் அவளை நெருங்கும் ஆபத்திலிருந்து விடுவிப்பானா நந்தன்?
மகிழ்ந்திரு