ஹைக்கூ தொடங்கி நாவல் வரை
எதில் உன்னை மறைத்தாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள் !
உன்னிடம் சொல்லாத ஆசைகளை
கண்ணியமாய் எடுத்துரைத்தாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள் !
உன் இல்லாமை தரும் ஏக்கத்தில்
கொஞ்சம் கலங்கி எழுதினாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள் !
என்னை கவனிக்காத கண்கள் கூட
என் காதலை கவனித்து விடுகின்றன!
நீயோ இன்னமும் என் கவிதையில்
எழுத்துப்பிழையையும் இலக்கணப்பிழையையும்
சுட்டிக்காட்டி கொண்டிருக்கிறாய் !
மீண்டும் எச்சரிக்கிறேன் ..,
குற்றம் பார்க்கின் முத்தம் இல்லை !