உன்னையும் கவிதைகளாக வாசித்தபின்
உனக்குள் பொருளென வசிக்க வந்தேன் !
என் தமிழ்தாய்க்கு நீ செல்லமகன் ஆதலால்
காதலால் மரு "மகள் " ஆகிவிட்டேன் !
நீ திருத்தும் அழகை ரசித்திடவே
நான் பிழையுரு படைப்பாய் மாறிவிட்டேன் !
உன் நேரமின்மையில் கூட எனக்காய்
நிமிடங்கள் நேர்த்தியாய் திருடிவிட்டேன் !
தவறுகள் பல இழைத்து விட்டு
உன் புரிதலால் நானும் பிழைத்து கொண்டேன் !
இதயச் சிறையில் நீ அடைக்கும்வரை
இடைவிடாது இம்சை செய்வேன் !