ஒரு மூலையில் உட்கார்ந்து வச்சு அதுக்கு சரியா சாப்பாடு துணிமணி எதுவும் கொடுக்காமல் ஏதோ பொறந்துட்டா சாகுற வரைக்கும் இங்கே கெடனு மாதிரி வச்சிருந்தாங்க. நம்ம பாப்பா என்ன நெனச்சிசாே தெரியல அந்த பாப்பாவை நம்ம தாத்தா வச்சு தத்து எடுக்க வைத்தது அந்தப் பாப்பாவோட வீட்டுக்காரர்களுக்கும் கொஞ்சம் காசு கொடுத்து இதுக்கு அப்புறம் இந்த பாப்பாவை தொல்லை செய்ய கூடாது ன்னு சொல்லிடுச்சி. அது மாதிரி இந்த பாப்பாவுக்கும் அவங்க பிறந்த வீட்டுக்கும் எந்த பழக்க வழக்கம் கிடையாது.
காசுக்காக எப்பவாவது காமாட்சி பாபாவைத் தேடி அவன் வருவான் அவன் ஏதாவது சண்டை எடுத்துட்டு தான் போவான் ஒருமுறை அப்படி தான் என்ன பண்ண அவங்க அம்மாவோட தம்பி என்று ஒருத்தன் விட்டுக்கு வந்து இந்த பாப்பாவுக்கு கல்யாணம் முடிக்கிறேன் என்று சொல்லி வந்தான். அப்போ இந்த பாப்பாவ நம்ம பாப்பா காலேஜ்ல சேர்த்து வைத்து இருந்துச்சு வேலை பார்த்துக்கிட்டே படிக்கிறதுக்கு இதுக்கு எல்லா உதவியும் செய்தது அந்த நாள்ல இந்த வீணாப்போனவன் இருக்கானே அவன் ஒரு தரங்கெட்ட பயல கூட்டிட்டு வந்து இந்த பாப்பாவுக்கு தாலி கட்ட சொல்லி சொன்னா. அவனும் காசு கிடைக்கும் என்று சொல்லி நம்ம பாப்பா கூட சண்டை போட்டு இந்த பொண்ண கூட்டிட்டு போய்யிடனும்னு நினைப்புல வந்துட்டான்.
நம்ம பாப்பா சும்மா விடுமா நம்ம பாப்பாவுக்கு வந்த கோபம் ஐயோ இதுவரைக்கும் யாருமே அவ்வளவு கோவமா இருக்குறவங்கள பார்த்திருக்க முடியாது கண்ணெல்லாம் சிவந்து உடம்பெல்லாம் வேறப்பா ஒரே ஒரு குரல் கேட்டுச்சு ஒருத்தன் கூட ஒரு அடி முன்ன வைக்க கூடாது. ஒருத்தன் உன்னோட கைய அவங்க மேல வச்சு பாருங்கடா. என் அக்கா மேல கை பட்டுசின்னா அதுதாண்டா உங்களுக்கு நீங்க வாழற கடைசி நிமிஷம்ன்னு சொல்லுச்சு பாருங்க!!??
இத கல்யாணம் பண்ணிக்க வந்த அவன் மாமன் நீ யார் இதை கேட்கிறதுக்கு என் வீட்டு பொண்ணு எங்க அக்கா மக நான் கல்யாணம் பண்ணிக்க போறேன் அப்படின்னு சொன்னா இந்த குழந்தைக்கும் அந்த ஆளுக்கு 25 வயசு யசு வித்தியாசம் இருந்தது இந்த பிள்ளைக்கு இருவத்தி அஞ்சு வயது இருக்கும் அந்த ஆளுக்கு 50 வயசு 50 வயசுல இந்த பிள்ளையை கல்யாணம் கட்டிக்க வந்தான் என்ன தம்பி சொல்றது நம்ப பாப்பாவுக்கு அப்ப பதினேழு வயசுதான் இருக்கும்