Chillzee KiMo Book Reviews - ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - சசிரேகா [Edhetho ennam valarthen - Sasirekha]
Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்து இருக்கும் நாவல் 'ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - சசிரேகா [Edhetho ennam valarthen - Sasirekha]' .
அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.
கதை சம்மரி:
வீரேந்திரன் வீட்டின் நான்காவது மகனாக பிறந்தவன். மூத்தவர்கள் மூன்றுப் பேரும் பொறுப்பில்லாமல் திரிகிறார்கள். முரடன், படிக்காதவன் என்றாலும் வீரேந்திரன் உண்மையாக உழைப்பவன். இதை புரியாமல் அவனுடைய அப்பா சுப்பிரமணியம் அவனை திட்டிக் கொண்டே இருக்கிறார்.
பெற்றவர்கள் இல்லாமல் மாமா வீட்டில் வளர்பவள் சங்கீதா. மாமா தன் மகளை சுப்பிரமணியம் குடும்பத்தில் திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறார். அந்த வீட்டில் இருக்கும் நான்கு மகன்களில் யார் சிறந்தவன் என்று கண்டுப்பிடிக்கும் பொறுப்பை சங்கீதாவிடம் கொடுக்கிறார். மாமாவிற்கு நன்றி கடன் தீர்க்க சுப்பிரமணியம் வீட்டிற்கு வருகிறாள் சங்கீதா. அங்கே இருப்பவர்களை பற்றி புரிந்துக் கொள்கிறாள். வீரேந்திரன் சங்கீதாவை விரும்புகிறான். சங்கீதாவோ வீரேந்திரன் தன் மாமா மகளுக்கு உரியவன் என்று நம்பி தள்ளிப் போகிறாள்.
வீரேந்திரன் காதல் வெற்றி பெற்றதா? சங்கீதா மனம் மாறினாளா? சுப்பிரமணியம் தன் பிள்ளைகளை பற்றி புரிந்துக் கொண்டாரா? என்ற கேள்விகளுக்கு நாவல் பதில் சொல்கிறது.
அடுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்திருக்கும் உன் கையில் என்னை கொடுத்தேன் - சசிரேகா [Un kaiyil ennai koduthen - Sasirekha] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - சசிரேகா [Edhetho ennam valarthen - Sasirekha] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- ($1.49) முதல் தொடங்குகிறது!
- அபூர்வா