(Reading time: 2 - 4 minutes)
உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன்
உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன்

Chillzee KiMo Book Reviews - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - சித்ரா கைலாஷ்

Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் Chillzee KiMo எழுத்தாளர் சித்ரா கைலாஷின் நாவல் 'உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன்'.

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

கதை சம்மரி:

கிருஷ்ண தேவ் பூந்துறை கிராமத்தில் இருக்கும் கிருஷ்ண பவனம் எனும் எஸ்டேட்டின் வாரிசு. அவன் சாதனா எனும் பெண்ணை காதலிக்கிறான்.

  

இருவரும் திருமணம் செய்துக் கொள்வதற்கு முன் தேவ்வின் பாட்டியுடன் நான்கு நாட்கள் சாதனா தங்க வேண்டும் என்று பாட்டி விரும்புகிறார்.

  

முதலில் அதற்கு சம்மதிக்கும் சாதனாவிற்கு கடைசி நிமிடத்தில் தேவ் அங்கே இருக்க மாட்டான் என்று தெரிய வரவும், பாட்டியுடன் தங்க விருப்பம் இல்லாமல் போகிறது. பாட்டி அவளை பார்த்ததில்லை. தேவ்வும் வெளிநாடு சென்றிருக்கிறான். அதனால் தன் அக்கா சஞ்சனாவை எமோஷனல் ப்ளாக்மெயில் செய்து கட்டாயப் படுத்தி அனுப்பி வைக்கிறாள்.

  

வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறாள் சஞ்சனா.

ஆனால் எதிர்பாராத விதமாக தேவ் அங்கே வந்து வந்து விடுகிறான்.

  

அப்புறம் என்ன, சஞ்சனா – சாதனாவின் ஆள் மாறாட்ட ப்ளான் அவனுக்கும் தெரிந்து விடுகிறது.

இந்த நிலையை சஞ்சனா எப்படி சமாளிக்கிறாள், தேவ் யாரை திருமணம் செய்துக் கொண்டான் என்பது மீதிக் கதை.

  

ந்த நாவலின் மிகப் பெரிய ப்ளஸ் கதையின் ஒவ்வொரு பக்கத்திலும் இழைந்தோடும் நகைச்சுவை. காதல் கதைகள் நிறைய படித்திருக்கிறோம். அதைப் படிக்கும் போது நமக்குள்ளே கேள்வி, நகைச்சுவை பல இழைகள் ஓடும். அப்படிப் பட்ட நகைச்சுவை இழையை நமக்காக கதையிலேயே சேர்த்துக் கொடுத்திருக்கிறார் சித்ரா.

இந்தக் கதையை ஸ்மைல் இல்லாமல் படிப்பவர்கள் அரிதிலும் அரிதாக தான் இருக்கும்.

   

குடும்பம், காதல், ஜனரஞ்சக நாவல் வாசகர்களை கட்டாயம் கவரும். 

  

உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- முதல் தொடங்குகிறது!

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.