பார்வதி அவர்களிடம் விவாதித்தாள். அவளுடைய பேச்சைக் கேட்ட பிறகு, அவர் களுக்குப் பார்வதியிடமிருந்த மதிப்புப் பன்மடங்காக உயர்ந்தது.
அன்று, கார்னேஷன் கல்லூரி பிரின்ஸிபால் வேதாந்தம் வந்திருந்தார். தூய தமிழிலேயே அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த பார்வதி, அவர் புறப்படும் நேரத்தில் ஞாபகமாக, "மீனா - கோபாலன் நட்பு இப்போது எந்த மட்டில் இருக்கிறது?' என்று கேட்டாள்.
வேதாந்தம் சிரித்துக் கொண்டே, "நல்ல முறையில் வளர்ந்து கொண்டிருக்கிறது. தாங்கள் கூட மீனாவின் தந்தைக்குக் கடிதம் எழுதியிருந்தீர்களாம். அவளுடைய தந்தை என்னைக் காண வந்திருந்தபோது கூறினார். கோபாலனைப்பற்றி எல்லா விவரங்களையும் விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவனையும் நேரில் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார். அநேகமாகத் திருமணத்துக்கு ஏற்பாடானாலும் வியப்பதற்கில்லை'' என்றார்.
அவர்கள் இருவருக்கும் என் மனப்பூர்வமான ஆசிகள்) என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினாள் பார்வதி.
இரவு மணி ஒன்பதரை இருக்கலாம். பார்வதி கண்களை மூடியபடியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. "ஒருவேளை சேதுபதியாயிருக்குமோ?" என்று யோசித்தாள்.
ஞானத்தை அழைத்து "வாசலில் கார் சத்தம் கேட்டதே, யார் வருகிறார்கள் என்று பார்'' என்றாள்.
"பாரதி..." என்றாள் ஞானம்.
"ராஜா இன்னும் வரவில்லையா? " பார்வதி கேட்டாள்.
"இன்னும் இல்லை...''
"சரி; சாப்பிட்டு முடிந்ததும் பாரதியை இங்கே வரச் சொல்!" என்று கூறி அனுப்பினாள் பார்வதி.
முதலில் பாரதியை டாக்ஸியில் கொண்டுவந்து விட்ட ராஜா பத்து நிமிடம் கழித்து அதே டாக்ஸியில் வந்து இறங்கினான்.
அவன் வந்து இறங்கியபோதும் கார் சத்தம் கேட்கவே, ”ராஜாவாகத்தான் இருக்கவேண்டும்” என்பதைப் பார்வதி எளிதில் ஊகித்துக்கொண்டாள்.
பாரதி சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஹார்லிக் ஸ்டன் பரம சாதுவாக மாடிக்குச் சென்றாள். பாரதியைக் கண்ட பிரின்ஸிபால் ”என்ன பாரதி! சினிமா நன்றா யிருந்ததா? என்ன படம் யாரெல்லாம் போயிருந்தீங்க?” என்று அன்போடு விசாரித்தாள்.
"இங்கிலீஷ் பிக்சர் மேடம்! அன்னாகரீனா!.” என்றாள் பாரதி.
”டால்ஸ்டாய் எழுதினது. ரொம்ப நல்ல கதையாச்சே! லவ் ஸ்டோரிதான்... ஆமாம்... ராஜா வந்து விட்டானா?''