(Reading time: 6 - 11 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 01 - சு. சமுத்திரம்

சென்னை, தியாகராயநகரில் உள்ள ஒய்யாரமான வீடுகளுக்கு இடையே, ‘மேக்கப்’ போட்ட கிழவி போலவும், ‘மேக்கப்’ இல்லாத இளம் பெண்களிலும் ‘நாட்டுக்கட்டை’ இளம் பெண் போல், ஒரு வீடு காட்சியளித்தது.

பழைய கொத்தனாரும், புதிய என்ஜினீயரும், கலந்து ஆலோசித்துக் கட்டியது போல் தோன்றிய அந்த வீடு, பழமையாக இல்லாமலும், புதுமையாகப் போகாமலும், பார்ப்பதற்கு அழகாக இல்லையென்றாலும், பழகுவதற்கு சுவையாகவே இருந்தது.

மேல் மாடியில், மாதச் சம்பளக் குடும்பங்கள் இரண்டு ‘குடித்தனம்’ புரிந்தன.

கீழே, வீட்டின் உரிமையாளர் சொக்கலிங்கம், குடும்ப சகிதமாகக் குடியிருந்தார்.

‘மொசாயிக்’ போட்ட தரை. மின் விசிறிகள் சுழலும் அறைகள். ‘டன்லப்’ பில்லோ கொண்ட ஒரு கட்டில், டி.வி.செட்டு. அதே சமயம், பழையன கழிக்கப்படவில்லை என்பதைக் காட்டும் வகையில், இடையிடையே, கோணி மூட்டைகளும், பூனைக்குட்டிகளும், தகர டப்பாக்களும், ‘டிரம்’களும் தான்தோன்றித்தனமாகக் கிடந்தன.

மல்லிகா தனது அறையில் இருந்து நெட்டி முறித்து, வெளியே வந்து, வராண்டாவில் போட்டிருந்த ஊஞ்சல் பலகையில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு கல்லூரிப் புத்தகத்தையோ அல்லது அந்தப் பாட நூலுக்குள் மறைத்து வைத்திருந்தாலும் வைத்திருக்கக்கூடிய காதல் புத்தகத்தையோ, படிக்கத் தொடங்கினாள். பிறகு ‘போரடித்தவள்’ போல், ஒரு காலை எடுத்து தரையில் ஊன்றி, விரல்களால் அழுத்தி, ஊஞ்சல் பலகையை ஆட்டிக் கொண்டாள். அந்த ‘ஆடல்’ சுகத்தில் ஆனந்தப்பட்டவள், உள்ளே ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு, முகத்தைத் திருப்பி லேசாக நிமிர்த்தி, மெல்லச் சிரித்துக் கொண்டாள்.

உள்ளே, குளியலறையில் அவள் அம்மாக்காரி பார்வதி யானை குளிப்பது மாதிரி, டிரம் நிறைய இருந்த தண்ணீரை, ‘டப்’பால் மொண்டு மொண்டு, தலையில் பாதி, அந்த டிரம்மில் பாதியாக ஊற்றிக் கொண்டிருக்க வேண்டும்! இல்லையானால் டிரம்மும், அந்த இரும்பு டப்பும் மோதி, அப்படியொரு பயங்கரமான சத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டியதில்லை. பிறகு எருமை மாடு சேற்றில் புரள்வது போல ஒரு சத்தங்கேட்டது. ஒரு வேளை சோப்புத் தேய்க்கிறாளோ என்னவோ...

‘இந்த அம்மாவுக்கு ஷவர் டேப்பைத் திறந்து ஜம்முன்னு குளிக்கத் தெரியலையே’ என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டிருந்த மல்லிகா, “நீ இன்னும் டிரஸ் பண்ணலியாம்மா” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள்.

கசங்கிய வேட்டியோடும், புழுங்கிய சட்டையோடும் சொக்கலிங்கம் நின்று கொண்டு இருந்தார்.

நல்ல சிவப்பான நிறம். மனிதருக்கு வயது ஐம்பதுக்கு அருகே வந்தாலும், இன்னும் மைனர்

4 comments

  • அந்தப் காலத்து பிரபல எழுத்தாளர்! காட்சியை கண்முன்னே நிறுத்துகிறார். காலத்தை வசனத்தில் காட்டுகிறார்கள். பலே!
  • :Q: thodarkathai endru thalaippu irukku.but kadaisi pakkathil mutrum ena pottirukku?nalla thodakkam. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.