(Reading time: 8 - 15 minutes)
Muthu Sippi
Muthu Sippi

கிடக்கிறாள். "இந்தப் பாழும் கையினால் யாருக்கும் ஒன்றும் நேரக் கூடாதே!" என்று பவானி மனதுக்குள் குமைந்து போனாள்.

  

அப்பொழுது இரண்டாவது வாரம் ஆரம்பம். ஜூரம் மும்முரமாக இருந்தது. நோயாளியின் அருகில் அருந்து அல்லும் பகலும் பணி புரிய ஒருவர் தேவை என்பது டாக்டர் ஸ்ரீதரனின் அபிப்பிராயம். இதை அவர் கூறிய போது நாகராஜனும் கோமதியும் ஒரு 'நர்ஸை' ஏற்பாடு செய்யும்படி அவரிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், ஜுரவேகத்தில் பிதற்றும் போது கூட அந்தப் பெண், ”அத்தை அத்தை” என்று அழைப்பதைக் கவனித்த டாக்டர். அருகில் நிற்கும் பவானியைப் பார்த்தார். "ஏனம்மா குழந்தை உங்களிடம் அதிகப் பிரியம் போல் தோன்றுகிறதே, உங்களால் அவளைக் கவனித்துக்கொள்ள முடியுமா? இல்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்து விடலாமா?" என்று கேட்டார்.

  

பவானி நீர் நிறைந்த கண்களுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள். "நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் என்னவெல்லாம் செய்யச் சொல்கிறீர்களோ, அதன் படியே நடந்து கொள்கிறேன். குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டாம்..." என்றாள்.

  

தன் தமையனின் குலவிளக்கு அணையாமல் இருக்க வேண்டும் ; அந்த வீட்டிலே இன்பம் நிறைய வேண்டும் என்கிற எண்ணம் ஒன்றே பவானியை நர்ஸாக மாற்றி யது. படித்து அவள் அந்தத் தொழிலுக்கு வரா விட்டா லும், மனத்தில் இருந்த ஆவப் அவளை அத் தொழிலைச் சீக்கிரம் கற்றுக் கொள்ளும்படிச் செய்தது.

  

பவானி நோயாளியின் அறைக்கு அடுத்த தாழ்வாரத்தில் தனக்கென்று படுக்கை அமைத்துக் கொண்டாள். மாடியை விட்டு அவள் கீழே போவதில்லை. பாலுவைக் கூடப் பாராமல் சுமதியின் அருகிலேயே இருந்து கவனித்து வந்தாள்.

   

--------------

தொடரும்...

Go to Muthu sippi - Part 2 story main page

One comment

  • :Q: moorthiyai patritherinthal radha thappithu vida mudiyum.sumathikku gunamaaga vendum.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.