"நெத்திக் காயத்துக்கு டாக்டர் தையல் போடுறார்னு நெனைக்கேன். எப்படியோ ஆசாமி தப்பிச்சிட்டான். ஏன் சரோசா, இவனப் பார்த்தா பட்டைக் கேஸாத் தெரியல... நல்ல பையனாய் தோணுது. அப்படி இருக்கையில் உன் வழில எப்படி வந்தான்.”
"அது பெரிய கதை அண்ணாத்தே. சொன்னாலும் தீராது, சொல்லியும் மாளாது. அந்தச் சக்களத்தி, பொறம்போக்கு முண்டை, என்னை எந்த நேரத்துல பெத்துப்பூட்டாளோ, அப்பவே..."
"சரி சரி, நான் கீழே போய், வசந்தாவை சமாளிக்கேன். காசுன்னு வந்துட்டா காதலனையும் மறந்துடறவள். சீக்கிரமா வா; ஸ்பெஷல் போட்டாப்போலவும் ஆச்ச... ஆஸ்பத்திரி காச வாங்கினாப்லயும் ஆச்சு.”
இப்போதே சரக்கை மோப்பம் பிடித்தபடி நோஞ்சான் ஆசாமி போனதும், தனித்து விடப்பட்ட ருக்குமணியும் சரோசாவும் சிறிது நேரம் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை. பிறகு பூக்காரியின் ருத்ரப்பார்வையை சாராயக்காரி தவிர்த்தாள். இறுதியில் ருக்குமணி மறக்கக்கூடாததை மறந்துவிட்டு இப்போ அது நினைவுக்கு வந்ததுபோல் திடுக்கிட்டுப் பேசினாள்:
"நல்லவேளை, இப்போதாவது ஞாபகம் வந்துட்டு... இளங்கோவோட வீட்ல போயி சேதி சொல்லி, அவங்களைக் கூட்டிட்டு வரணும். இங்கயே இரு; அவங்களுக்கு நீ ஜவாப் சொல்லியாகணும். அப்புறம் உன்பாடு, அவங்கபாடு. அந்த கஸ்மாலம் சாரு ரமணன், நீ சத்தா சமுத்திரத்துக்குள்ள போனாலும் போலீஸ் வலையால வீசிப் பிடிச்சுடுவான். அவங்க வாரது வரைக்கும் இங்கயே நில்லு. சொல்றது காதுல விழுதா?"
சரோசா, காதில் விழுந்ததை கண்ணீராகக் காட்டினாள். பிறகு அதை லேசாகச் சுண்டிவிட்டு கைகளைக் கட்டிக் கொண்டாள். நடக்கது நடக்கட்டும் என்பது மாதிரி சிறிது நின்றுவிட்டு, பிறகு ருக்குமணியைப் பார்த்துப் பதிலளித்தாள்:
“நீ நெனைக்கிறது மாதிரி நடக்காதுன்னாலும், நான் போகப் போறதில்லே. அனுமார், லவகுசாகிட்ட கட்டுப்பட்டது மாதிரி நானும் அண்ணன்கிட்டப் போகாமல், இங்கயே கட்டுப்பட்டு