(Reading time: 6 - 12 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

பவமேகப் பாவம் போக்கும். நன்மை யாவுமிங்குள.

   

ஸோமே : இந்தச் சோலை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? நம்முடைய மற்ற நண்பர்களைப் போல் இல்லாமல் இது ஒன்றுதான் நம்மிடம் எப்பொழுதும் ஒரே விதமான அபிமானத்துடன் இருக்கிறது. தனவந்தன், ஏழை என்னும் பேதமில்லாமல் இது எப்பொழுதும் குளிர்ந்த நிழலையும், பழங்களையும், இன்பத்தையும் கொடுக்கிறது.

   

மாத : உண்மைதான்; பகுத்தறிவைப் பெற்ற மனிதனைக் காட்டிலும், அதைப் பெறாத மரஞ்செடி கொடிகளே மேலானவை; அதைப் பற்றி சந்தேகமென்ன?

   

(ரகுவம்ச சுதா என்ற கீர்த்தனையின் மெட்டு)

   

கதனகுதுகலம் – ஆதி

   

ஸோமே :

   

ப. பலவாய்க்கூடின பறவை யாடின!

   

மலர்வாய் வண்டினம் மோகனம் பாடின

   

மாத:

   

அ. குழலோ நாதமே குயிலின் கீதமே!

   

மழலை மொழியால் அஞ்சுகம் கொஞ்சின.

   

ஸோமே :

   

செவிக்கோர் பெரும் விருந்தே யிது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.