பவமேகப் பாவம் போக்கும். நன்மை யாவுமிங்குள.
ஸோமே : இந்தச் சோலை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? நம்முடைய மற்ற நண்பர்களைப் போல் இல்லாமல் இது ஒன்றுதான் நம்மிடம் எப்பொழுதும் ஒரே விதமான அபிமானத்துடன் இருக்கிறது. தனவந்தன், ஏழை என்னும் பேதமில்லாமல் இது எப்பொழுதும் குளிர்ந்த நிழலையும், பழங்களையும், இன்பத்தையும் கொடுக்கிறது.
மாத : உண்மைதான்; பகுத்தறிவைப் பெற்ற மனிதனைக் காட்டிலும், அதைப் பெறாத மரஞ்செடி கொடிகளே மேலானவை; அதைப் பற்றி சந்தேகமென்ன?
(ரகுவம்ச சுதா என்ற கீர்த்தனையின் மெட்டு)
கதனகுதுகலம் – ஆதி
ஸோமே :
ப. பலவாய்க்கூடின பறவை யாடின!
மலர்வாய் வண்டினம் மோகனம் பாடின
மாத:
அ. குழலோ நாதமே குயிலின் கீதமே!
மழலை மொழியால் அஞ்சுகம் கொஞ்சின.
ஸோமே :
செவிக்கோர் பெரும் விருந்தே யிது.