(Reading time: 6 - 12 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

தாங்கள் மன்னிக்க வேண்டும். (வணங்குகிறான்)

   

குண: (நடுநடுங்கி) இதென்ன ஆச்சரியம்! கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதைப் போல, இவன் வண்டிக்குள்ளிருந்து வருகிறானே யார் இவன்? இதற்குள் எப்படி நுழைந்தான்? வஸந்தஸேனை எங்கே? (கையைப் பிசைந்து கொண்டு ஒரு மூலையில் நிற்கிறான்)

   

மாத : (பிரதாபனைப் பார்த்து) அப்படியானால் நீ வண்டியில் வந்ததைப் பற்றிச் சந்தோஷமே! நீ யார்? உனக்கு என்ன ஆபத்து நேர்ந்தது? இந்த வண்டியில் நீ எப்படி ஏறிக் கொண்டாய்?

   

பிரதா : நான் மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்தவன் என் பெயர் பிரதாபன்.

   

மாத : ஒகோ! நீ தானோ பிரதாபன்? போதும் போதும்; சங்கதிகள் எல்லாம் எங்களுக்குத் தெரியும். போகட்டும்; எப்படியாவது நீ உயிர் தப்பி வந்தாயே; அதுவே போதும். உனது விதியே நட்பாயிருந்து உன்னை இங்கு கொண்டு வந்தது.

   

பிரதா : நான் சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடி வந்தேன். என்னைப் பலர் துரத்தி வந்தனர். கடைசியாக தங்கள் மாளிகைக் கதவின் மறைவில் ஒளிந்து கொண்டேன். இந்தப் பெட்டி வண்டி வந்தது. அதில் வந்து ஏறிக் கொண்டேன்.

   

குண : இந்த சங்கிலியின் ஓசையை வஸந்தஸேனையின் ஆபரணங்களின் ஒசையென்று நினைத்து ஓட்டிக் கொண்டு வந்து விட்டேன் முட்டாளாகிய நான்.

   

மாத : குணசீலா கவலைப்படாதே! நீ செய்தது பெருத்த உபகாரம்; கடவுளே இவ்விதமாக நடக்கும்படி சூழ்ச்சி செய்திருக்கிறார். நல்லது; இவரை இதிலேயே உட்கார வைத்து இவர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவா.

   

(பிரதாபன் பேரில் இருந்த சங்கிலியை விலக்கி நீக்குகிறார்)

   

பிரதா : ஆகா! ஸ்வாமி! தங்களுடைய குணத்தைப் புகழாதவர்களே இல்லை. அதை நான் இப்பொழுதே நேரில் காண்கிறேன். நீங்கள் விலக்கிய சங்கிலியைக் காட்டிலும் அதிக வலியுடையதும் எப்பொழுதும் நீடித்து நிற்கக் கூடியதுமான வேறு ஒரு சங்கிலியால் என் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.